சனி, 29 ஜூன், 2013

மூட்டை கட்டிய அன்சுல் மிஸ்ரா.

மதுரையில் அழகிரி சாம்ராஜ்யத்தை ஒடுக்க நியமிக்கப்பட்டவர்கள்தான் சகாயம்,அடுத்து அன்சுல் மிஸ்ரா போன்ற மாவட்ட ஆட்சியர்கள்.
இப்போது அழகிரி அமுங்கி விட்டார்.
சகாயம் துணிகள் விற்க [கோ -ஆப் டெக்ஸ் ]அனுப்பப்பட்டு விட்டார்.கல்கோரி விவகாரத்தில் அதிமுகவினரிடமும் அடங்காமல் இருந்ததால் இப்போது அன்சுல் மிஸ்ராவும்
வணிகவரி கணக்கு-வழக்கு பார்க்க ஒதுக்கப்பட்டூ விட்டார்.
கலெக்டராக இருந்த சகாயம் கடந்தாண்டு மே மாதம் கோ ஆப்டெக்ஸ் இயக்குனராக மாற்றப்பட்டார். திருவண்ணாமலை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா மதுரைக்கு மாற்றப்பட்டார்.
2012 மே 28ல் புதிய கலெக்டராக அன்சுல் மிஸ்ரா பொறுப்பேற்றார். கிரானைட் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி பல்வேறு உண்மைகளை இவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். பெரிய நிறுவனங்களுக்கு சீல் வைத்தார். கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 800க்கு மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் ஆளுங்கட்சியினரின் பரிந்துரைகளை இவர் ஏற்கவில்லை. நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை மட்டும் நியமனம் செய்தார். இது ஆளும் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக 3 தாசில்தார்கள், 5 துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், 15 விஏஓக்களை சஸ்பெண்ட் செய்தார். பொதுமக்களின்  மனுக்களை பெற்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் பேஸ்புக் மூலம் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட புகார் மனுக்களை பெற்றார். இவற்றின் மீது விசாரணை நடத்தி உடனுக்குடன் தீர்வு கண்டார்.ஊரக பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை அடிக்கடி ஆய்வு செய்தார்.

சரியில்லாத பணிகளின் ஒப்பந்தங்களை ரத்து செய்தார். அரசு கட்டிடங்களைக் கட்ட ஒப்பந்தம் எடுத்த கான்ட்ராக்டர்கள் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு கமிஷன் கொடுத்து தரமற்ற பணிகளை செய்ததாக புகார் எழுந்தது. இதில், விசாரணை நடத்தி, கான்ட்ராக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். மேலும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் முறையற்ற பரிந்துரைகளை கலெக்டர் ஏற்பதில்லை எனக் கூறப்பட்டது.இதனால், ஆத்திரமடைந்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் சேர்ந்து  கூட்டம் போட்டு கலெக்டரை மாற்ற வேண்டும் என மூத்த அமைச்சர்கள் குழுவிடம் மனு கொடுத்தனர். ஆனால், அமைச்சர்கள் குழு கலெக்டரை பகைத்து கொள்ளக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பினர். மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல் புகார்கள் தொடர்பாக அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை எடுத்தார். குறிப்பாக உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெறாமல் முறைகேடாக கட்டப்பட்ட 40க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்தார். மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை அகற்றினார். இதில் மேயருக்கும், கலெக்டருக்கும் மோதல் ஏற்பட்டது.ரிங் ரோட்டில் பில் இல்லாமல் டோல்கேட் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக போலீஸ் மூலம் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வைத்தார்.

 முறைகேட்டில் ஈடுபட்ட 2 மாநகராட்சி ஊழியர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாநகராட்சியின் நிர்வாகத்தில் கலெக்டர் தலையீடுவதாக கூறி, கவுன்சில் கூட்டத்தில் கலெக்டரை கண்டித்து தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் ஆளுங்கட்சியினரின் தூண்டுதல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. நேற்று முன்தினம் இரவு கலெக்டர் முன்னிலையில் மேயர், மாநகராட்சி ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்நிலையில் பணியேற்று ஒரு வருடம், ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில் மக்களின் நன்மதிப்பை பெற்ற, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய கலெக்டராக கடலூரில் சப் கலெக்டராக பணியாற்றும் சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அன்சுல் மிஸ்ராவுக்கு வணிகவரித்துறை இணை ஆணையர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிரானைட் விசாரணை நிலை என்ன?
கிரானைட் குவாரியில் யி16 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு என முன்னால் கலெக்டர் சகாயம் கண்டுபிடித்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் அன்சுல்மிஸ்ரா முறையாக விசாரணை நடத்தி 86 குவாரிகளில் முறைகேடு என கண்டுபிடித்தார். உரிய விசாரணைக்கு பிறகு போலீசார் 50க்கு மேற்பட்ட வழக்கு பதிவு செய்து 40க்கு மேற்பட்டோரை கைது செய்தனர்.ஏற்கனவே கிரானைட் விசாரணை அதிகாரியான ஜான்லூயிஸ் மாற்றப்பட்டார். தற்போது கலெக்டர் அன்சுல்மிஸ்ராவும் மாற்றப்பட்டதால் இதன் விசாரணை எப்படி போகும் என தெரியவில்லை. தற்போது இதில் இருக்கும் ஒரே அதிகாரி மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
 கலெக்டர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. மேலூர் பகுதியில் 20 ஆண்டுகளாக முறைகேடாக நடந்த கிரானைட் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். குவாரிகள் மூலம் மாவட்டத்தில் தனிராஜ்யம் நடத்தியவர்களை கைது செய்ததுடன், நிலஅபகரிப்பு, கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்தும் வருவாய்த் துறையினரை கொண்டு ஆய்வு நடத்தினார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை, அளந்து, மதிப்பீடு செய்து, ஏலமிட ஏற்பாடுகள் செய்தார். குறைதீர் நாள் கூட்ட நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. மாற்றுத் திறனாளிகள், முதியோரிடம் தனி அக்கறை செலுத்தினார். லஞ்சம், முறைகேடு புகாரிகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 இதனால் வருவாய்த் துறையினர் போராட்டமே நடத்தினர்.
சமீபத்தில் முறைகேடு செய்த துணை தாசில்தார் ஒருவரை கலெக்டர் பணி நீக்கமே செய்தார். நாள்தோறும் கலெக்டரிடன் பேஸ்புக்கில் பலர் புகார் அனுப்பினர். அவற்றின் மீது கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார். யூனியன்களிலும், பிர்க்கா அளவிலும், நகராட்சிகளிலும் நேரடியாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டார்.
 3 நாட்கள் பெண்களுக்கான முகாம் நடத்தி, மனுக்கள் பெற்றது, கவுன்சிலிங், மருத்துவ முகாம் நடத்தியதும் பெண்களிடம் வரவேற்பை பெற்றது. விதிகளை மீறிய பல கட்டடங்களுக்கு சீல் வைத்தார். இப்பிரச்னையில் மாநகராட்சியுடன் உரசல் ஏற்பட்டது. வளர்ச்சித் திட்டப் பணிகள் தரம் குறித்தும், "கட்டிங்' தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதிருப்தியான ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் முன்னிலையில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில், "கலெக்டர், எஸ்.பி., திட்ட இயக்குனர் இருக்கும் வரை சம்பாதிக்க முடியாது. இவர்கள் மூவரையும் மாற்ற வேண்டும்,' என வெளிப்படையாக பேசினர். ரிங்ரோட்டில் முறைகேடாக கட்டணம் வசூலித்த ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
 பணவசூலில் மாநகராட்சியில் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என கூறப்பட்டது.
 போலீசாரின் நடவடிக்கைக்கு, கலெக்டரின் பின்னணி இருக்கலாம் எனக் கருதிய மாநகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
மேயர் ராஜன்செல்லப்பா, கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
"கிரானைட்' கற்களை "இ-டெண்டர்' விட முயற்சியையும் அன்சுல் மிஸ்ரா மேற்கொண்டார். ஆளும் கட்சியினர் மேலிடத்தில் முட்டி மோதினர். மாநகராட்சி நிர்வாகத்திலும் தேவையில்லாமல் கலெக்டர் தலையிடுகிறார் என, 2 நாட்களுக்கு முன் தலைமை செயலாளருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
நேற்று திடீரென சென்னை வணிகவரித்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
என்னதான் ஆள்வோர் எண்ணப்படி நடந்து கொண்டாலும் கட்சிக்காரர்கள் வரவு-செலவுக்கு இடைஞ்சலாக இருந்தால் மூட்டையை கட்ட வேண்டியதுதான்.இது இன்னொரு முறை நிருபணமாகியுள்ளது.

வெள்ளி, 28 ஜூன், 2013

"மோடி"யின் "மந்திரம் "?

"குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சில அதிகாரிகளுடன் டெஹ்ராடூனில் வந்து இறங்கினார். ஞாயிற்றுக் கிழமைக்குள் உத்தர்கண்ட் அழிவுகளில் சிக்கியிருந்த 15,000 குஜராத்திகளை மீட்டு அவரவர் வீடுகளுக்கு மோடி அனுப்பி வைத்து விட்டதாக சொல்லப்பட்டது."
ஊடங்களில் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்டது.
"இந்தியாவின் முழு ராணுவ அமைப்பும் 40,000 பேரை மீட்பதற்கு 10 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் போது ஒரே நாளில் இது எப்படி சாத்தியமானது?"
மோடி 80 இன்னோவா கார்களை பயன்படுத்தி இந்த சாதனையை நடத்தியதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.
 அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் வழியாக, நிலச் சரிவுகளால் தடுக்கப்பட்ட இடங்களைத் தாண்டி இந்த கார்கள் எப்படி கேதார்நாத் போன்ற பகுதிகளை அடைந்தன?
மோடியின் இன்னோவாக்களுக்கு சிறகுகளும் ஹெலிகாப்டர் போல விசிறிகளும் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். ஓட்டுனரையும் சேர்த்து ஒரு இன்னோவாவில் 7 பேர் பயணம் செய்யலாம். நெருக்கடியான நிலைமையில் 9 பேர் வரை அதில் திணிக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 80 இன்னோவாக்கள் ஒரே நேரத்தில் 720 பேரை டெஹ்ராடூனுக்கு அழைத்து வர முடியும்.
 15,000 பேரை மீட்டு வருவதற்கு இந்த கார்களின் பேரணி 21 தடவை போய் வந்திருக்க வேண்டும்.
டெஹ்ராடூனுக்கும் கேதார்நாத்துக்கும் இடையிலான தூரம் 221 கிலோமீட்டர். 21 தடவை போய் வருவதற்கு ஒரு இன்னோவா கிட்டத்த 9300 கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்க வேண்டும். சமவெளியை விட மலைப்பகுதிகளில் மெதுவாகவே பயணிக்க முடியும். சராசரி வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் என்று வைத்துக் கொண்டால், ஒரு நொடி கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஓட்டியிருந்தால், ஆட்களை ஏற்றி இறக்குவதற்கான நேரத்தை சேர்க்காமல், பாதிக்கப்பட்ட மக்களை தேடுவதற்கான நேரத்தை சேர்க்காமல் இந்த சாதனையை செய்து முடிக்க 233 மணி நேரம் ஆகியிருக்கும்.
அதாவது, அப்படி உழைத்திருந்தால் 10 நாட்களில் இந்த சாதனையை முடித்திருக்கலாம். ஆனால், மோடி ஒரே நாளில் அதை சாதித்தார்.
உண்மையில் ஒரு நாளை விட குறைவான நேரத்தில் சாதித்தார். சனிக்கிழமை வாக்கில் 25 சொகுசு பேருந்துகளில் குஜராத்திகள் டெல்லி வந்து சேர்ந்ததாக ஊடகங்கள் மூச்சு விட மறந்து செய்தி வெளியிட்டன.
வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக நான்கு போயிங் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனவாம்.
எப்போதுமே அடக்கமானவரான மோடி 15,000 குஜராத்திகளை இமாலய பேரழிவிலிருந்து ஒரே நாளில் மீட்டதாக தானே சொல்லவில்லை. தயாராக காத்திருந்த ஊடகங்களுக்கு இதை வீசி எறிந்தது அமெரிக்காவைச் சேர்ந்த "ஆப்கோ வேர்ல்ட்வைட்" என்ற விளம்பர நிறுவனமாக இருக்கலாம்.
 துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகளை ஊதிப் பெருக்குவதற்காக என்று மாதம் $25,000 (சுமார் ரூ 12 லட்சம்) செலவில் 2007-ம் ஆண்டு ஆப்கோ வேலைக்கமர்த்தப்பட்டது.
 ஆனால் நடைமுறையில் அது மோடியின் பிம்பத்திற்கு மெருகேற்றும் வேலையை செய்து வருகிறது.
கசகஸ்தானின் சர்வாதிகாரி நூர்சுல்தான் நசர்பேவ், மலேசிய மற்றும் இஸ்ரேல் அரசுகள், அமெரிக்க சிகரெட் லாபி என்று பல பிரசித்தி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மோடிக்கு முன்பே ஆப்கோ சேவை செய்து வந்தது.
அமெரிக்க சிகரெட் துறைக்காக, புகையிலை புற்றுநோயை உருவாக்குகிறது என்ற ஆதாரங்களை தாக்கும் அமைப்புகளை அது உருவாக்கியது.
அஜர்பைஜான், துருக்மெனிஸ்தான் அரசுகள், நைஜீரிய சர்வாதிகாரி சானி அபாச்சா ஆகியோருக்கும் அப்கோ வேலை செய்து வந்தது.
அதன் சக்தி வாய்ந்த ஆலோசனைக் குழுவில் முன்னாள் இஸ்ரேலிய வெளியுறவு அதிகாரிகளான இடாமர் ராபினோவிச், ஷிமோன் ஸ்டெய்ன் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையில் மிக உயர் மட்டத்தில் இருக்கும் டோரோன் பெர்கர்பெஸ்ட்-ஐலோ ஆகியோர் உள்ளனர்.
மோடியின் புத்துருவாக்கத்துக்கும் ஒளிவட்ட பிரச்சாரங்களுக்கும் ஆப்கோதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆப்கோவிற்கு முன்பு துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகள் அவ்வளவு சூடு பிடிக்கவில்லை. முதல் மூன்று உச்சி மாநாடுகளில் $14 பில்லியன் முதல் $150 பில்லியன் முதலீட்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஆப்கோவிற்கு பிறகு 2009-லும், 2011-லும் அது $253 பில்லியன், $450 பில்லியன் என்று உயர்ந்தது.
அமெரிக்காவின் முதலீட்டாளர்களை வளைத்துப் போட ஆப்கோ தீயாக வேலை செய்தது. மோடி அமெரிக்காவிற்கு போவதற்கு இருந்த தடையை நீக்கும்படி வாஷிங்டன் அரசியல்வாதிகளிடமும் அது பிரச்சாரம் செய்தது. 2002-ம் ஆண்டு அவரது நிர்வாகத்தின் கீழ் நடந்த முஸ்லீம்கள் படுகொலையை அடுத்து அந்த தடை செயல்படுத்தப்பட்டது. இதுவரை, மோடிக்கு அமெரிக்க விசா வாங்கித் தருவதில் ஆப்கோ வெற்றியடையவில்லை.
துடிப்பான குஜராத் புள்ளிவிபரங்கள் எல்லாம் வெத்து வேட்டுகள்தான். 
மோடியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கிங்ஷூக் நாக் செய்த ஆய்வின்படி 2009-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 3.2% மட்டுமே வந்து சேர்ந்தது. 2011-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 0.5% மட்டுமே உண்மை.
ஆனால், ஆப்கோ இருந்தால்தான் மோடி பொய் சொல்ல முடியும் என்பதில்லை. 2005-ம் ஆண்டு மாநில அரசுக்கு சொந்தமான ஜிஎஸ்பிசி இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பை நடத்தியுள்ளதாக அவர் அறிவித்தார். ஆந்திராவின் கடற்கரை பகுதியில் $5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதே பகுதியில் ரிலையன்சின் கட்டுப்பாட்டில் இருப்பதை விட இது 40% அதிகம். எகிப்து, ஏமன், ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் அகழ்வு பணிகளை கைப்பற்றுமாறு மோடி ஜிஎஸ்பிசியை ஊக்குவித்தார்.
மோடியின் அறிவிப்பு வெத்து வேட்டு என்று பலர் சந்தேகித்தார்கள். ஆனால் போதுமான தடயங்கள் இல்லாமல் அப்படி சொல்ல முடியாமல் இருந்தது. 2012-ம் ஆண்டில் எரிசக்தி கண்டுபிடிப்புகளை சரி பார்த்து, உறுதி செய்யும் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன்களுக்கான இயக்குனரகம், மோடி அறிவித்ததில் 10% மட்டுமே உண்மை, அதாவது 2 லட்சம் கோடி கன மீட்டர் வாயு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதுவும் அகழ்ந்து எடுப்பதற்கு சிரமமான பகுதியில் உள்ளது என்றும் முடிவு செய்தது.
இதற்கிடையில் மோடியின் உற்சாகமான தலைமையின் கீழ் ஜிஎஸ்பிசி அகழ்வு நடவடிக்கைகளுக்கு $200 கோடியை செலவிட்டது. அதில் பெருமளவு 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு உள்ளது என்ற அடிப்படையில் வாங்கிய கடன். வாயு மறைந்ததும் ஜிஎஸ்பிசியும் திவால் ஆனது.
அதை காப்பாற்றுவதற்கு, நகர எரிவாயு வினியோகம் போன்ற துறைகளில் நுழையும்படி அதனை மோடி ஊக்குவித்தார். இதிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டன, அவற்றில் ஒன்று பார்படோசில் உள்ள ஒரு நிழலான நிறுவனத்துடனான ஒப்பந்தம்.
ஒவ்வொரு துறையிலும் மோடியின் கதை முழுவதும் சவடால்களும் ஆரவாரமும் நிறைந்திருக்கிறது.
ஆனால் "மோடியின் சமீபத்திய இமாலய ஜாலம் "அப்பட்டமான  கலப்படமற்ற பொய்.

நன்றி: – அபீக் பர்மன், டைம்ஸ் ஆஃப் இந்தியா
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

தற்கொலைகள் , - தமிழ்நாடு முதலிடத்தில்.

கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர்.
 தேசிய குற்றப்பதிவுத் துறை அளித்திருக்கும் புள்ளிவிவரங்களின் படி மேற்கு வங்கத்தை தவிர்த்து விட்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த இந்திய தற்கொலைகள் பற்றிய அறிக்கையின்படி மொத்தம் 79,773 ஆண்களும், 40,715 பெண்களும் உயிரை துறந்திருக்கின்றனர்.

தற்கொலை விகிதப்படி பார்த்தால் ஒரு இலட்சத்திற்கு 11.2 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
 ஒரு மணிநேரத்திற்கு 15 தற்கொலைகளும், ஒரு நாளைக்கு 371 தற்கொலைகளும் நடக்கின்றன. பாலின ரீதியில் 242 ஆண்களும், 129 பெண்களும் ஒரு நாளில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தேசிய குற்றப் பிரிவுத் துறை
இந்திய அளவில் நடக்கும் தற்கொலைகளில் மொத்தம் 16,927 தற்கொலைகள் நடந்த தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து மராட்டிய மாநிலம் 16,112 தற்கொலைகளுடன் இரண்டாம் இடத்திலும், மேற்கு வங்கம் மூன்றாம் இடத்திலும், 14,328 தற்கொலைகள் நடந்த ஆந்திரா நான்காம் இடத்திலும் உள்ளன. நகரங்கள் என்று பார்த்தால் 2,183 தற்கொலைகள் நடந்த சென்னை முதலிடத்தில் உள்ளது.
புதுச்சேரியில் மட்டும் ஒரு இலட்சம் மக்களில் 36.8 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது இந்திய அளவில் முதலிடம் ஆகும். 2012-ம் ஆண்டில் மட்டும் 541 நபர்கள் புதுச்சேரியில் தற்கொலை செய்திருக்கின்றனர். தமிழ்நாட்டின் விகிதம் ஒரு இலட்சம் பேருக்கு 24.9 ஆக உள்ளது. இது இந்திய அளவில் மூன்றாம் இடமாகும்.
இந்திய அளவில் குடும்பப் பிரச்சினைக்காக ஒரு நாளில் 84 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். சமூக, பொருளாதார காரணங்களினால் ஆண்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் போது பெண்களைப் பொறுத்தவரை உணர்ச்சிகரமான மற்றும் தனிப்பட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மொத்த தற்கொலைகளில் திருமணம் செய்த ஆண்கள் 71.6 சதவீதமும், திருமணம் செய்த பெண்கள் 67.9 சதவீதமும் உள்ளனர். ஒவ்வொரு ஆறு தற்கொலைகளிலும் ஒரு தற்கொலையை திருமணம் முடித்து இல்லத்தரசியாக இருக்கும் ஒரு பெண் செய்து கொள்கிறார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்கள் சேர்ந்து இந்திய அளவில் 50.6 சதவீத தற்கொலைகளைக் கொண்டிருக்கின்றன.
தற்கொலை செய்து கொள்வோரில் 37 சதவீதம் பேர் தூக்கு போட்டும், 29.1 சதவீதம் பேர் விசம் குடித்தும், 8.4 சதவீதம் பேர் தீ வைத்தும் உயிரை விடுகின்றனர். கடந்த வருடம் மட்டும் 50,062 நபர்கள் தூக்கு போட்டு இறந்திருக்கின்றனர். அதில் ஆண்கள் மட்டும் 34,631 பேர்கள் ஆவர்.
சென்ற வருடம் 19,445 நபர்கள் விஷம் குடித்து இறந்திருக்கின்றனர். அதில் 12,286 பேர்கள் ஆண்கள் ஆவர். இதில் தமிழ்நாடு 3,459 தற்கொலைகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்ற வருடம் தீ வைத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 11,438 ஆகும். இதில் பெண்கள் 7,326 பேர்கள் உள்ளனர். இதிலும் தமிழ்நாடு 2,349 பேர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதில் பெண்களின் எண்ணிக்கை 1,481 ஆகும்.
தீவைத்து இறப்போரில் முதலிடம் வகிக்கும் நகரமான கான்பூரில் சென்ற வருடம் 285 பேரும், இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னையில் 282 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஓடும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்பவர்களின் சென்ற வருட எண்ணிக்கை 4,259. அதில் ஆண்களின் எண்ணிக்கை 3,554 ஆகும். 1,101 பேரை பறிகொடுத்த ஆந்திரம் இதில் முதலிடத்தில் இருக்கிறது.

தேசிய குற்றப்பதிவுத் துறையின் கணக்குப்படி 2011-ம் ஆண்டில் 1,35,585 பேர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர். 2012-ல் இது 1,35,445 ஆக உள்ளது. ஏறக்குறைய ஒரே எண்ணிக்கைதான். 2002-ம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டிவிட்டது. 2002-ம் ஆண்டில் 1,10,417 பேர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர்.
அதன்படி பார்த்தால் இந்த பத்தாண்டுகளில் குறைந்த பட்சம் பதினைந்து இலட்சம் பேராவது தங்களது உயிரை மறித்திருக்க வேண்டும்.
இந்த விவரங்களை வைத்து சமூக ரீதியில் எங்கு ஏன் தற்கொலை நடக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம். நகரமயமாக்கம் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தற்கொலை அதிகம் உள்ளது. மது, கந்து வட்டி, மதிப்பெண் குறைவு, படிப்பு தோல்வி, தொழிற்சங்க பாதுகாப்பு இன்மை, பெண்களின் பாலியல் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பின்மை பிரச்சனை காரணமாக தற்கொலைகள் நடக்கின்றன. விசம் குடித்து தற்கொலை செய்வோரில் இந்திய அளவில் விவசாயிகள் கணிசமாக இருப்பார்கள்.
குடும்பத்தின் பொருளாதாரச் சுமை ஆண்களை அதிகம் சார்ந்து இருப்பதால் அவர்களே பெண்களை விட அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்கின்றனர். கான்பூரில் தீ வைத்து செய்யப்படும் தற்கொலைகளில் வரதட்சணை மற்றும் தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதி வன்முறைகளுக்கும் இடமுண்டு. ஆதலாம் அது கொலையா, தற்கொலையா என்று சுலபத்தில் கண்டறிய முடியாது. பிற பின்தங்கிய மாநிலங்களில் தற்கொலைகள் தமிழகம் அளவுக்கு சட்டபூர்வமாக பதிவு செய்யப்படாமல் இருக்க வாய்ப்புண்டு.
திருமணம் செய்த பிறகே மனிதர்கள் குடும்ப நிறுவனத்தை தனியாக நடத்தும் பொறுப்பேற்கிறார்கள் என்பதால் திருமணம் செய்தவர்கள் செய்யும் தற்கொலை அதிகமாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு சமூகப் பின்னணியை கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போது இது குறித்து விரிவாக எழுதுகிறோம். ஆயினும் தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டுமே தற்கொலையில் முதலிடத்தில் இருக்கின்றன என்ற செய்தியை தமிழ் மக்கள் பாரதூரமாகப் பரிசீலிக்க வேண்டும்.
மேலும் படிக்க:
TN tops in suicides due to failure in love and exam
India saw 1,35,445 suicides last year
நன்றி : வினவு

வியாழன், 27 ஜூன், 2013

கலெக்டர் ஆ.முருகேசன்

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்ட கலெக்டர் முருகேசன் துணிச்சலுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற பயணிகள், அங்கு பெய்த பெருமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டு, அடர்ந்த காட்டுப்பகுதியில் சிக்கி தவித்தனர்.
இவர்களை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை மூலம் மீட்டு அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது.

இந்த மீட்பு பணியில், சமோலி மாவட்டத்தைச் சேர்ந்த கலெக்டர் ஆ.முருகேசன் துணிச்சலுடன் ஈடுபட்டு வருகிறார். இவர் தமிழ் நாட்டில், சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகில் உள்ள செலவடை கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ஆறுமுகம். ஓய்வு பெற்ற ஆசிரியர். தாயார் லெட்சுமி. மனைவி, மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த தேவி பிரியா. ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற முருகேசன், உத்தரகாண்ட் மாநில பணிக்கு ஒதுக்கப்பட்டார்.

அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்துமே மலைப்பகுதிகளாகும். எல்லா இடங்களும் வெள்ளமும், நிலச்சரிவும் இருப்பதால், எங்கேயும் மோட்டார் வாகனம் மூலமாகவோ, படகுகள் மூலமாகவோ செல்ல முடியாது. ஹெலிகாப்டரில் செல்வது தான் ஒரே வழி.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கலெக்டர் ஆ.முருகேசன் ஹெலிகாப்டரில் சென்று, மக்களுக்கு ஆறுதல் கூறுவதுடன், நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். மேலும் ஒவ்வொருவரையும் மீட்டு ராணுவ ஹெலிகாப்டர் தளம் உள்ள தாலுகா தலைநகர் ஜோஷிமட் கொண்டு வந்து சேர்க்கிறார். தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலுடன் மீட்பு பணியில் ஈடுபடும் கலெக்டர் ஆ.முருகேசனை பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பாராட்டுகிறார்கள்.

இந்த நிவாரண பணி குறித்து ஜோஷிமட்டில் உள்ள ராணுவ ஹெலிகாப்டர் தளத்தில், ஆ.முருகேசன்  கூறியதாவது:-
"சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் பகுதியில் புகழ்பெற்ற கோவில்களும், ஹேம்குந்த் சாகிப் என்ற சீக்கியர்களின் புனித தலமும் உள்ளன. இந்த இடங்களுக்கு, மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய வரமுடியும். மீதம் உள்ள 6 மாதங்களில் பனி மூடிவிடும் என்பதால் அங்கு போகவே முடியாது. கோவிலையும் மூடிவிடுவார்கள். இந்த 6 மாதங்கள் மட்டும் மாநிலத்தின் பிறபகுதிகளைச் சேர்ந்தவர்கள் சமோலி மாவட்டம் பத்ரிநாத் பகுதிகளுக்கு வந்து உணவு விடுதிகள், சிறு கடைகள், குதிரை சவாரி, சுமை தூக்குவது போன்ற பல தொழில்களை செய்வார்கள். பனி மூடியவுடன் இவர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று விடுவார்கள்.

சராசரியாக ஆண்டுக்கு 15 லட்சம் பக்தர்கள் புனித யாத்திரையாக இந்த பகுதிக்கு வருகிறார்கள். இந்த முறை வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்ட நேரத்தில் 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கொஞ்சம், கொஞ்சமாக மீட்டு அனுப்பி உள்ளோம். தற்போது 3 ஆயிரம் பேர் அங்கு இருக்கிறார்கள். அவர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மழையும் மேகமூட்டமும் இருப்பதால் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. என்றாலும் இன்னும் 3 நாட்களில் அனைவரும் மீட்கப்பட்டு விடுவார்கள். இன்றுள்ள நிலவரப்படி இரவு நேரங்கள் மட்டுமல்லாமல் காலை 11 மணி முதல் அவ்வப்போது மழையும் தொடர்ந்து மேக மூட்டமும் அதிகமாக காணப்படுவதால் ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியவில்லை. என்றாலும் வானிலை கொஞ்சம் சீரடைந்தவுடன் ஹெலிகாப்டரில் நிவாரண பணிகளை தொடங்கி விடுவோம்."
ஆந்திர மாநில பக்தர்களை ஊருக்கு அழைத்து செல்வதில் காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகள் இடையே போட்டி ஏற்பட்டது. இதில், டேராடூன் விமான நிலையத்தில் இரு கட்சியினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இயற்கை பேரழிவால் பெரும்பாதிப்புக்குள்ளாகி உள்ள உத்தரகாண்டில் இருந்து, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்களை மீட்டு அழைத்து செல்வதற்காக மாநில காங்கிரஸ் அரசின் சார்பிலும், எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் சார்பிலும் விமானங்கள் டேராடூன் சென்றிருந்தன. இந்த விமானங்கள் அங்குள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் நேற்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இரண்டு விமானங்களில் எந்த விமானத்தில் பக்தர்களை அழைத்து செல்வது என்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இவ்விரு கட்சியினருக்கும் இடையே விமான நிலையத்தில் வைத்து பயங்கர மோதலும் உருவானது.

காங்கிரஸ் எம்.பி. ஹனுமந்தராவ், தெலுங்குதேசம் எம்.பி.க்கள் ரமேஷ் ரத்தோடு, கே.நாராயணா ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கைகலப்பும் அரங்கேறியது. இவ்வளவும் தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் நடந்தது.
இந்த களேபரத்துக்கு மத்தியில் இரு கட்சி தொண்டர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிர்கோஷங்களையும் முழங்கினர். இதனால் விமான நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஹனுமந்தராவ் கூறுகையில், ‘‘பக்தர்களை ஏற்றிச்செல்வதற்காக ஆந்திர அரசு அமர்த்தியுள்ள விமானம் தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் ஐதராபாத் செல்வதற்கு ஏற வந்த பக்தர்களை, தாங்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்வதாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் தடுத்து விட்டனர்’’ என்றார்.
பக்தர்களை அழைத்துச்செல்லும் பணியை மேற்பார்வையிடுவதற்காக ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டியால் அனுப்பப்பட்டிருந்த மாநில சிவில் சப்ளை துறை மந்திரி ஸ்ரீதர்பாபு, அரசு கடமை ஆற்றுவதை தெலுங்கு தேசம் தடுத்துவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

ஆனால் காங்கிரஸ் எம்.பி.யின் கூற்றை தெலுங்கு தேசம் எம்.பி.ரமேஷ் ரத்தோடு மறுத்தார். இது பற்றி அவர் கூறுகையில், ‘‘எங்கள் கட்சி அமர்த்தியுள்ள விமானத்தில் ஏறுவதை தடுக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் செயல்படுகின்றனர். பக்தர்களை ஏற்றி வருகிற பஸ் வந்து சேருவதை அவர்கள் தாமதப்படுத்தினர்’’ என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவிக்கையில், ‘‘இது துரதிர்ஷ்டவசமானது. இது நடந்திருக்கக்கூடாது. ஒரு துயர சம்பவத்தின்போது, போட்டி போடக்கூடாது. அதே நேரத்தில் கடைசி பக்தர் திரும்பும்வரை எங்கள் பணிகள் ஓயாது’’ என கூறினார்.
உத்தரகாண்டில்  பொதுவாக வானிலை மோசமாகவே இருந்தது. இருப்பினும் இன்னும் 8 ஆயிரம் பேரை மீட்க வேண்டி உள்ளது.உத்தரகாண்ட் பகுதியில் அடிக்கடி வானிலை பாதிக்கப்படுவதால் மீட்பு பணிகள் முடிவடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
 எனவே மோசமான வானிலைக்கு மத்தியிலும் டேராடூன் ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் இருந்து 5 ‘மி–17’ ரக ஹெலிகாப்டர்கள் புறப்பட்டு சென்றன. உத்தர்காஷி மாவட்டத்தில் ஹார்ஷில் பகுதியில் இருந்து  மதியம் வரை 230 பேர் மீட்கப்பட்டனர்.

கைப்பற்றப்பட்டுள்ள உடல்கள் அழுகி வருவதால் தொற்றுநோய் உண்டாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 எனவே அத்தனை உடல்களையும் மொத்தமாக தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டி உள்ளது.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
"கனிமொழி................................   எம்.பி."


டெல்லி மேல்–சபை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி, அக்கட்சியின் தலைவர் கருணாநிதியை சந்தித்து, வெற்றிபெற்றதற்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

டெல்லி மேல்–சபைக்கு தமிழக அரசில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 6 பதவிகளுக்கு, 7 பேர் போட்டியிட்டதால், 17 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குப்பதிவு நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த வாக்குப்பதிவில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட 231 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.
தேர்தல் முடிவு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 4 பேரும், அக்கட்சியின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் டி.ராஜாவும் பெற்றனர். இந்த வெற்றி ஏற்கனவே தெரியும் என்றாலும், 6–வதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி. யார்? என்பதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் கடும் போட்டி நிலவியது. இதில், காங்கிரஸ், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியோரின் ஆதரவை பெற்று, தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.
கருணாநிதியிடம் வாழ்த்து
வெற்றி பெற்றவுடன், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டுக்கு இரவு 8 மணியளவில் வந்தார். அவருக்கு முன்னதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் காசிமுத்துமாணிக்கம் உள்பட தி.மு.க. தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
கனிமொழி எம்.பி. காரில் வந்தவுடன் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். வீட்டுக்குள் சென்ற கனிமொழி எம்.பி., தி.மு.க. தலைவர் கருணாநிதி, தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். அதனைத்தொடர்ந்து தொண்டர்கள் அவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
 மேல்–சபை தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இந்த வெற்றி தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. என்னை 2–வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்க வாக்களித்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், புதிய தமிழகம் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

-

ஞாயிறு, 23 ஜூன், 2013

அம்மாவும் நீயே!-

 அம்மாவும் நீயே!- 

,அய்யாவும் தானே?

"அம்மா " திட்டங்கள்  இப்போது கடும் வாத-எதிர் வாதங்களை உருவாக்கியுள்ளது.
அம்மா  உணவகங்களில் ஆரம்பித்த மலிவு அலை இப்போது 10 ரூபாய் மினரல் தண்ணீர் போத்தலில் வந்து நிலை கொண்டுள்ளது.

இன்னமும் அந்த அம்மா அலை பல்விடயங்க்களுக்கு நகரும் ஆபத்துள்ளது.
காய்கறிகளிலும்,20ரூபாய் அரிசியிலும் அது பாய்ந்துள்ளது.கருணாநிதியின் உழவர் சந்தைதான் உருமாறியுள்ளது.அதாவது மஞ்சள் -பச்சை,மரக்கலர் ஆகியுள்ளது.
இதன் மறு பக்கம் பார்த்தால் 2011 அம்மா ஆட்சிக்கு வரும் முன் இருந்த விலைவாசியிகளில்தான் இன்றைய அம்மா மலிவு பொருட்கள் விலை உள்ளது என்பதை கண்கூடாக தெரிந்து கொள்ளாலாம்.
இன்னமும் பச்சையாக சொன்னால் கருணாநிதி கால விலைவாசியில் பொருட்களை தருவதே இன்றைய "அம்மா திட்டம் ".
அதற்கு இவ்வளவு விளம்பரங்கள் தேவையா?விளம்பரச் செலவை குறைத்தால் இன்னமும் பொருட்களை மலிவாக தரலாம்.
மொத்தத்தில் தான் ஆட்சிக்கு வந்த பின் தானே வரியை போட்டு ,தானே ஏற்றிய விலைவாசியில் இருந்து மக்களுக்கு பிச்சை போடுவதான முறையில்தான் இந்த மலிவு விலை திட்டங்கள் உள்ளன.
இந்த அளவு விலைகளை உயர்த்தியதே இந்த அம்மாவின் நிர்வாகம்தானே.
அதை மறைத்து மக்களிடம் பெயர் பெறும் வகையில்தான் இவைகள் உள்ளன.
விலைவாசியை கட்டுக்குள் வைத்தாலே இது போன்ற உணவகம்,20ரூபாய் அரிசி,தண்ணீர் போத்தல் விவகாரங்கள் தேவையில்லையே?
 பிள்ளையை கிள்ளி விட்டவரே ,தொட்டிலை ஆட் டி நல்ல பெயர் எடுக்கும் அவலச்செயல் தானே.

அம்மா  உணவக ள்  இன் னும் சில நாட்கள்தான் என்று தெரிகிறது.

அத்திட்டத்திற்கு அரசு நிதியே ஒது க்கவில்லை.
அனைத்தும் அந்தந்த மாநகராட்சிகள் தான் செலவிட வேண்டும் .
கட்டிடங்கள் முதல் பலசரக்கு ,பணியாளர்கள் வரை.
தினசரி பல ஆயிரங்கள் இழப்பில் மாநகராட்சிகள் இப்போதே முழி பிதுங்கியுள்ளது.  பழுதான தெரு விளக்கையே சரி செய்ய பணம் இல்லை என்பவர்கள்,ஊழியர்களுக்கு மாதாமாதாம் சம்பளம் போடவே தினறிவந்தவ்ர்கள் ,கையில்தான் மலிவு விலை உணவகங்கள் .
இனி நகராட்சியிடம் ஏதாவது வசதிகள்,தெருவை சீரமைக்க செய்யக்கோரி சென்றால் அவர்கள் திட்டுவதை நாம் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.ஆனால் அவர்கள் திட்டுவது நம்மை அல்ல என்பதயும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இந்த 10 ரூபாய் மினரல் தண்ணீர் போக்குவரத்து கழகங்களின் பொறுப்பு.அவர்கள் ஒன்றும் இளித்த வாயர்கள் அல்ல.10 ரூபாய் இழப்புக்கு 20ரூபாயை பேருந்து கட்டணத்தில் கூட்டி விடுவார்கள்.இளித்தவாயர்கள் இப்போது பயணம் செய்பவர்கள்தான் என்றாகி விடுகிறது.
ஆக இந்த மலிவு விலை அம்மா தட்டங்கள் எல்லாமே மக்களை இன்னமும் கொடுமை படு த்தும் திட்டங்களாகவே  உருமாறி விடும் அபாயத்தில்தான் நாம் அதாவது பாவப்பட்ட தமிழக மக்கள் இருக்கிறோம் .
இது போன்ற திட்டங்களே வேண்டாம் .இது மக்களை மேலும் இரந்துண்டு வாழ்வோர்களாக்கி விடுகிறது.
அதற்கு மாற்றாக வரிகளை குறைத்து ,விலைவாசிகளை குறையுங்கள்.
 "பல ஆண்டுகள் பேசும் "ஆண்டு விழா சாதனை [?]விளம்பரங்களுக்கு 120 கோடிகள் கணக்கில் அரசுப் பணத்தை செலவிட்டு விளம்பரங்களை வெளியிடுவதை தவிர்த்து அப்பணத்தை மிச்சப் படுத்துங்கள் .
அவ்ளோதான் .




வயிற்றுக்கு உண்பது எப்படி?

---------------------------------------------

சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சனை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சனை நீளும்.
எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.

அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த ‌சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.

சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.

நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.

சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.

சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.

பரங்கிக்காய், பெரிய காராமணி, காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.

ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.

நன்றி:தமிழ்க் கதிர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

 

சனி, 22 ஜூன், 2013

தரமானதா... தனியார் கல்வி?

                                                                                                                                     என்.பகத்சிங்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், கல்லூரிகள் துவங்கியுள்ளன.
தாத்தா - பாட்டி முதல் அத்தை - மாமா வரை எல்லோரும் பிள்ளைகள் பெறும் மதிப்பெண் கள் மீதே கவனமாக இருந்து, எதிர்பார்ப்பு களில் வெற்றிகண்டவர்களாகவும், ஏமாந்த வர்களாகவும் இருப்பர்.

 மதிப்பெண்கள் பெறு வதும் மட்டுமே கல்வியின் இறுதி வெற்றியாக கருதும் மனோபாவம் இவர்களுக்கு எங் கிருந்து வந்தது? என்ற கேள்வி நெடு நாளாகவே இருந்து வருகிறது.
 ஒரு மாண வரின் அறிவுத்திறனை எங்கிருந்தோ, யாரோ ஒருவரால் வழங்கப்படும் மதிப்பெண்கள் சரியாகத் தீர்மானிக்குமா? அந்த அளவுகோல் சரியானது தானா?
மதிப்பெண்கள் மட்டுமா : மதிப்பெண் பெற்றுத்தரும் சமூக அங்கீ காரம் மிக முக்கியமாக மாற்றப்பட்டதின் விளைவுதான் மதிப்பெண்ணை மட்டுமே முன்னிறுத்தும் இன்றைய மனோநிலை. மத்திய தர, உயர் மத்திய தர வகுப்பினரின் வீடு களில் மதிப்பெண் அதிகமாகவும், குறைவாக வும் பெற்ற மாணவர்களைவிட அவர்தம் குடும் பத்தினர் தேர்வை யுத்தகளமாகவும், மதிப் பெண்ணை வெற்றிச் சின்னமாகவும் கருது கின்ற மனப்பாங்கு கொண்டவர்களாகவே மாறியுள்ளனர்.
 பள்ளியிறுதி தேர்வில் பிள்ளைகள் 1,150க்கு மேல் மதிப்பெண் பெற்றால்தான் பெற் றோர்கள் நிம்மதியாக மூச்சுவிடுகின்றனர். மதிப்பெண்ணுக்குப் பின்னால் ஒரு மாயை யை ஏற்படுத்தி அதைக் கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நடப்புச் சூழலில் ஒரு மாணவருக்கு பின்னால் இந்த வகுப்பினரின் முழு குடும்பமும் உழைக்கிறது.
அதிக மதிப்பெண் பெறுவதே தரமான கல்வி என்ற முடிவுக்கு வருபவர்களின் இந்த மனோ பாவத்திற்கான ஊற்றுக்கண் இந்தியாவின் கல்விக் கொள்கை, வேலைவாய்ப்புக் கொள் கை, தொழிற்கொள்கை, பொருளாதாரக் கொள் கை ஆகியவற்றாலேயே நிகழ்ந்துள்ளது. தர மான கல்வி பற்றிய சிந்தனையோட்டத்தை ஊடகங்களும் திறமையாக, கல்வி குறித்த பேட்டிகள், கல்வியாளர்களின் விளக்கம், கல்விமலர், கல்வி கண்காட்சியென உரு வாக்கி நடத்துகின்றன.

தனியார் பள்ளிகள் : ஓசூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, நாமக் கல், பெருந்துறை, ஈரோடு முதலிய பகுதி களில் புற்றீசல்கள் போல தனியார் பள்ளிகள், பள்ளியிறுதித் தேர்வுக்கான மாணவர்களை மட்டுமே தயார் செய்து வருகின்றன.
அதிலும் நாமக்கல் பகுதியில் கோழிப் பண்ணைகள் நடத்தும் உரிமையாளர்கள், பண்ணைகளை உபதொழிலாக சுருக்கிக் கொண்டு பள்ளிகள் நடத்துவதை முதன்மைத் தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
 பஸ், லாரி கட்டும் பெரும் முதலாளிமார்களும் இத்தகைய பள்ளிகளில் பாகஸ்தர்களாக சேர்ந்துள்ளனர். நாமக்கல் பகுதியே கல்விச் சேவையில் கல்லாகட்டி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் பத் தாம் வகுப்புத் தேர்வு முடிவுதான் இவர்களின் பள்ளி கல்வித் தொழிலுக்கான திறவுகோல். இந்தாண்டு பத்தாம் வகுப்பில் 460க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் முன்னு ரிமை. 480க்கு மேல் எடுத்து முதலில் வரும் 100 பேருக்கு கல்விக் கட்டண சலுகை என கவர்ச்சியான விளம்பரங்கள் நாமக்கல் வெளி யிடும் பள்ளிகளில் பிளஸ் 2க்கு முதலாம் ஆண்டு கட்டணம் ரூ. 1,78,000/- (விடுதி கட் டணம், கல்விக் கட்டணம் உட்பட) இரண் டாம் ஆண்டுக்கு ரூ.2,00,000 இந்தத் தொகை யையும் டிடியாகவோ, செக்காகவோ கட்ட முடியாது. பணமாகத்தான் கட்ட வேண்டும்.

இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் நாளொன்றுக்கு பதினாறு மணி நேரத்திற்கும் மேல் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்ய வேண்டும். விடுதிகளில் தங்கி வேலை செய் பவர்களுக்குத்தான் இங்கு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என பணியமர்த்தப்படுகிறார்கள். காலை 5 மணிக்கு இவர்களின் பணி துவங்கி யோகா, உடற்பயிற்சி, காலை படிப்பு, வழிபாடு, உணவு, வகுப்புகள், உணவு, விளையாட்டு, சலவை, குளியல், சிற்றுண்டி, மாலை படிப்பு, வீட்டுப்பாடம், இரவு உணவு, இரவு படிப்பு என அட்டவணை ஒன்றின்படி இரவு 11 மணி வரை இவர்களின் பணிநீள்கிறது. இவர் களுக்கு விடுப்பு என்பதே கிடையாது. ஞாயிற் றுக்கிழமைகளில் தங்கள் கீழ் உள்ள மாண வர்களைப் பார்க்க வரும் பெற்றோர்களுக்கும், தொலைபேசியில் அழைக்கும் பெற்றோர் களுக்கும் பிள்ளைகளின் கல்வி, நலன் தொடர்பான விசாரணைகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஓய்வு என்பதே கிடையாது.
 மாண வர்களுக்கும் இதேநிலைதான். தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள், இரவுபடிப்பு, காலை படிப்பு, வகுப்புகள் என மாணவர்களும், ஆசிரி யர்களும் கசக்கி பிழியப்படுகின்றனர். இத னால்தான் மாநில அளவிலான இடங்களை இந்தப் பள்ளிகளால் பெற முடிகிறது. இந்த மாணவர்கள் மருத்துவம், பொறியியலிலும் அதிக இடங்களை ஆக்கிரமிக்கின்றனர். கலை அறிவியல் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.

ஆங்கில மோகம் : மெக்காலோவின் கல்விக் கொள்கை ஆங்கிலத்தை அறிவுசார் மொழியாகவும், ஆங்கிலேயர்களை அறிவு சான்றவர்களாக வும் அன்றைக்கு முன்னிறுத்தியது. இதனால் மேலை நாட்டுச் சிந்தனை, பொருள் உற்பத்தி நுகர்வு, உணவுமுறை, கண்டுபிடிப்பு, பழக்க வழக்கம், விளையாட்டு, கொண்டாட்டம் என அனைத்தும் உயர்வானதாக நமக்குள் திணிக் கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் வெற்றிக்கான மொழி என ஒரு பிரிவினரால் நம்பப்படுகிறது. ஆங்கில மோகம் மிக வேகமாகப் பரவியதற்கு அது சமூக மதிப்பாக மாறிப் போனது மட்டு மல்ல, கல்வி உலகளாவிய வணிகமானதும் தான் காரணம்.1970களில் தமிழகத்தில் பள்ளிக் கல்விக்குள் தனியாரை அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது. சிறு முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும், பள்ளிக் கல்வி யில் முதலீடு செய்வது லாபகரமானது என பள்ளிகளைத் தொடங்கினர். இன்று கார்ப்ப ரேட்டுகளும் இத்தொழிலில் ஈடுபடுகின்ற னர். 2001ல் இப்பள்ளிகளுக்கு தனி இயக்கு நரகம் உருவாக்கிய பிறகு தனியார் பள்ளிக ளின் எண்ணிக்கை 15,657 ஆக உயர்ந்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு களில் 2000 முதல் 2010 வரையிலான பத்து ஆண்டுகளில் 210 மாணவர்களும், 2010 முதல் 2012 வரையிலான இரண்டு ஆண்டு களில் மட்டும் 64 பேரும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். இவர்களில் 203 மாணவர்கள் தனியார் பள்ளி களில் பயின்றவர்கள். 2013ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாநில இடம்பிடித்த 13 பேரில் 12 பேரும், பத்தாம் வகுப்பில் மாநில இடம்பிடித்த 198 பேரில் 179 பேரும் தனியார் பள்ளி மாணவர்கள்.
கடந்த பதின்மூன்று ஆண்டுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை 92 சதவீத தனியார் பள்ளி மாணவர்களே பெற்றுள்ளனர் என்பதி லிருந்தே பள்ளிக் கல்வித்துறையில் தனியார் களின் ஊடுருவலை விளங்க முடியும்.சில ஊடகங்கள் இந்தத் தேர்வு முடிவுக ளை வைத்துக் கொண்டு கல்வி நிறுவன முத லாளிகளுக்குச் செய்யும் சேவை வெகுதுரிதம். உயர்கல்வியில் மருத்துவமும், பொறியியலும் அதி உன்னத கல்வியாக இவர்களால் உரு வகப்படுத்தப்படுகிறது. பள்ளி தேர்வு முடிவு களை ஒட்டி இந்த பணிகளை ஊடகங்கள் துவக்குகின்றன.

மதிப்பெண்களை மட்டும் முதன்மைப்படுத்தி பேசுவதும், கல்வி ஆலோ சகர்கள் என்ற சிலரைக் கொண்டு உரைகள் நிகழ்த்தப் பெறுவதையும், கண்காட்சிகள், வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்துவதையும், மருத்துவம், பொறியியல் படிப்புகளில் இருக் கும் போட்டிகளை விவரிப்பதும், விண்ணப் பிக்கும்முறை, வேலைவாய்ப்பு முதலியன பற்றி திரும்ப திரும்பச் சொல்வதுமாக மிகப் பெரிய சித்தரிப்புகளைச் செய்கின்றன.


வசதிபடைத்தவர்கள் மற்றும் வசதி படைத்தவர்களாக (கடன் வாங்கி) தங்களை கருதி கொள்கிற பெற்றோர்கள் ஒரு புறம். ஏழை, எளிய மக்களின் பிரதிநிதிகளான பெற் றோர்கள் ஒருபுறமென கல்வி இருவேறு கூறு களாகப் பிரிந்து கிடக்கிறது. முதல் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிக செலவு செய்து தங்கள் பிள்ளைகளை பொறியாளர்களாகவும், மருத்து வர்களாகவும் உருவாக்க முயல்கின்றனர். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பிள்ளைகள் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயின்று அர சுத்துறை பணித்தளங்களான கல்வித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, வங்கித்துறை போன்ற துறைகளில் பணிகளில் சேருகின் றனர்.
முதலாம் பிரிவைச் சேர்ந்த மருத்துவர் களும், பொறியாளர்களும் தனியார்த்துறை களிலேயே பணிகளில் சேருகின்றனர். ஆக பணியமர்வு தளங்களும் இரு வேறு கூறுக ளாக தனியார் பள்ளிகளால் பிரிக்கப்படுகிறது. இப்படி உருவாகும் பொறியாளர்களும், மருத் துவர்களும் பணத்தைக் கொட்டி செயற்கை யாக, ஊதி பெரிதாக்கப்பட்டு மனப்பாட முறை களால் உருவாக்கப்படுவதால் அவர்களின் சிந்தனையோட்டம் இந்திய இயல்பு களுக்குள் பொருந்தாமல் வேறுபட்டு நிற் கிறது.
ஆங்கில மோகம், அன்னியர்களுக்கு சேவை என்ற அடித்தளங்களிலேயே இவர் களின் இத்தகைய பள்ளிக் கல்வி இவர்களை உருவாக்குகிறது.கண்ணுக்குத் தெரியாமல் இவ்வாறு உரு வாக்கப்படும் இருவேறு சமூகம், ஏற்றத் தாழ்வுகளை இன்னும் அதிகரிக்கவே வழி வகுக்கும். புதிய சிக்கல்களை உருவெடுக்க வைக்கும். இவற்றினைக் களைவதுதான் உண்மையான கல்வியாளர்களின் நீண்ட பணியாக இருக்கும்.


கட்டுரையாளர் : அகில இந்திய இன்ஷ்யூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------   
முகனூலில்  முத்திரை பதிந்தவை.
----------------------------------------------------
 நன்றி :எதிரொலி

கனவுக்கன்னியும் காகிதப்புலிகளும்!


தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு ஜப்பானிய சர்வதேச கூட்டுறவுக்கான அமைப்பின் நிதி உதவியை நாடியிருக்கிறார்.


இதுகுறித்து அந்த குறிப்பிட்ட ஜப்பானிய அமைப்பின் அதிகாரிகள் தன்னை நேரில் சந்தித்தபோது ஜெயலலிதா தனது கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது. மேலும் அந்த செய்திக்குறிப்பில் "2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு" என்கிற ஜெயலலிதாவின் "கனவு திட்டத்தின்" இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அந்த இரண்டாம் பாகத்தில் ஜெயலலிதா பட்டியலிடப்போகும் திட்டங்களுக்கு ஜப்பானிய நிதி உதவி தேவை என்று ஜெயலலிதா கோரியதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.


http://m.thehindu.com/news/national/tamil-nadu/jayalalithaa-seeks-jica-aid-for-infrastructure-projects/article4833407.ece/?maneref=http%3A%2F%2Fm.thehindu.com%2Fnews%2Fnational%2Ftamil-nadu%2F%3Fmaneref%3Dhttp%253A%252F%252Fwww.thehindu.com%252F%253Fmstac%253D0


இந்த செய்திக்குறிப்பில் ஜப்பானிய நிதிஉதவியுடன் தமிழ்நாட்டில் இதுவரை நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்பட்டுவரும் பல்வேறு உள்கட்டுமான பணிகளும் பட்டியலிடப்பட்டு, இதற்கு ஜப்பானின் நிதி உதவி அளிக்கப்பட்டதற்கு ஜெயலலிதா சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இப்படி பட்டியலிடப்பட்டிருக்கும் முக்கியமான உள்கட்டுமானப்பணிகள் எல்லாம் எந்த ஆட்சியில் துவக்கப்பட்டவை என்று கூர்ந்து பார்த்தால் அவை ஒன்று திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டவை அல்லது திமுக ஆட்சியில் வேகப்படுத்தப்பட்டவை என்பது புரிபடும். இந்த பட்டியலில் இருக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டாலே தமிழ்நாட்டின் உள்கட்டுமான நிர்மாணிப்பில் திமுக அரசின் பங்களிப்பு என்ன என்பது புரிபடும்.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் எப்படி புறக்கணிக்கப்பட்டது என்பதையும், தற்போதைய ஜெயலலிதா அரசால் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் எப்படி பின்னுக்குத் தள்ளப்பட்டு, உலகில் வேறு எங்குமே உருப்படாத மோனோரயில் திட்டம் எப்படி பலவந்தமாக சென்னையில் திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் ஒருவர் ஒப்பிட்டு பார்த்தாலே, திமுக என்கிற கட்சியும், கருணாநிதி என்கிற அதன் தலைவரும் என்ன செய்தார், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எப்படியெல்லாம் பயன்பட்டார் என்பதையும், ஜெயலலிதா என்கிற திரைப்பட நடிகை எப்படி அரசியலையும், ஆட்சியையுமே மிகப்பெரிய கண்காட்சியாக மாற்றி மோசடி செய்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
இப்போது கூட சென்னையின் மிகமுக்கிய உள்கட்டுமான திட்டமான மதுரவாயல்—சென்னை துறைமுக மேம்பால விரைவு சாலைத்திட்டத்தை தனது முட்டாள் தனத்தால் முடக்கிப் போட்டிருப்பவரும் சாட்சாத் ஜெயல்லிதா தான். இந்த லட்சணத்தில் இந்த ஜெயலலிதா புதியதாக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட ஜப்பானிய நிதிஉதவி கேட்கிறார் என்றால் எதனால் சிரிப்பது என்று தான் தெரியவில்லை.


அதுவும் இவர் ஜெப்பானிடமிருந்து எதற்காக நிதிஉதவி கேட்கிறார் என்றால், இவர் வெளியிடவிருக்கும் “2023இல் தமிழ்நாடு” என்கிற “கனவு திட்டத்தின்” இரண்டாவது பாகத்தில் இனிமேல் சொல்லவிருக்கும் திட்டங்களுக்கு நிதிதேவை என்று கேட்டாராம்.


ஜெயலலிதாவின் “கனவு” திட்டத்தின் இரண்டாவது பகுதி இனிமேல் தான் வரப்போகிறது என்றால் இவர் ஏற்கெனவே வெளியிட்ட “கனவு” திட்டத்தின் முதல்பகுதியின் நிலை என்ன என்று உங்களுக்கு சந்தேகம் எழுவது இயல்பு. அவரது “கனவின்” முதல் பாகத்தை அவர் மிகுந்த விமரிசையாக சென்ற ஆண்டு வெளியிட்டார். வழக்கம்போல இந்திய தமிழக ஊடகங்களெல்லாம் “ஆஹா அம்மா கனவு கண்டுவிட்டார்; தமிழ்நாடு ஓஹோவென முன்னேறப்போகிறது” என்று கொண்டாடி மகிழ்ந்தன.

http://www.ndtv.com/article/tamil-nadu/tamil-nadu-cm-releases-vision-tamil-nadu-2023-document-188860


“அம்மா கனவின்” முதல் பாகம் வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகி, அந்த கனவின் எந்த பகுதி நிறைவேறி பொதுமக்களுக்கு பயன்பட்டிருக்கிறது என்பதை “அம்மாவின் அடிமைகள்” யாராவது தயவு செய்து விளக்கிச் சொன்னால் தேவலாம். எதிரொலியின் பார்வைக்கு அம்மா கண்ட கனவின் எந்த பகுதியும் நிதர்சமானதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.


மாறாக இந்த ஒரு ஆண்டில் சென்னையில் துவங்கப்பட்ட மலிவுவிலை இட்லிக்கடைகள் மாநிலமெங்கும் விரிவடைந்திருக்கின்றன. அடுத்த கட்டமாக இப்போது மலிவு விலை காய்கறிக்கடைகள் திறந்திருக்கிறார். இவையும் மாநிலமெங்கும் விரிவடையும் என்று எதிர்பார்க்கலாம். இதெல்லாம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியா? வீழ்ச்சியின் அறிகுறியா என்பதை சுயமாக சிந்திக்கத் தெரிந்த சுயமரியாதை உள்ள தமிழர்களின் சுயமுடிவுக்கே எதிரொலி விட்டுவிடுகிறது.
மற்றபடி, “அம்மா கனவின்” முதல் பாகத்துக்கே மலிவு விலை இட்லிகடையும், காய்கறிகடையும் திறக்கும் சூழல் உருவாகியிருக்கிறது என்னும்போது, அவர் “கனவின்” இரண்டாவது பாகத்தை வேறு விரைவில் வெளியிடப் போகிறேன் என்கிறார். அப்படி அவர் வெளியிட்டால் தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் மலிவாக கிடைக்குமோ என்று எதிரொலிக்கு பயமாக இருக்கிறது.


ஆனாலும் என்ன, வெள்ளித்திரையின் இந்த முன்னாள் கனவுக்கன்னியின் ஆட்சியை, வாங்கும் அரசு விளம்பர காசுக்காக புகழ்ந்து தள்ள காகிதப்புலிகளாம் தமிழ்நாட்டு ஊடகங்கள் காத்திருக்கும்வரை, ஜெயலலிதா செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.


நாளுக்கொன்றாக காட்சியை மாற்றினாலே போதும். நேற்றைய காட்சியும் இன்றைய காட்சியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டால்கூட அவருக்கு ஒரு பிரச்சனையும் வராது. காரணம் இந்த முரண்பாட்டை சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் தான், இந்த முன்னாள் கனவுக்கன்னியின் நாளைய கனவு என்னவாக இருக்கும் என்று பொழிப்புரையை எழுதியே இன்றைக்கு அவரை காப்பாற்றும் காகிதப்புலிகளாயிற்றே! கைவிடமாட்டார்கள். அவர் தொடர்ந்தும் “கனவு” காணலாம்! கரம்பாய்ப் போவது தமிழ்நிலம் தானே?

வெள்ளி, 21 ஜூன், 2013

தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி?



இந்த உலகத்தில் தெளிவாய் பேசிக் குழப்புகிறவர்களும் உண்டு. குழப்பமாய் பேசித் தெளிவுப்படுத்துகிறவர்களும் உண்டு.
அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கொள்வது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.


இந்த உலகத்தில் தெளிவாய் பேசிக் குழப்புகிறவர்களும் உண்டு. குழப்பமாய் பேசித் தெளிவுப்படுத்துகிறவர்களும் உண்டு.
ஒரு பெரிய திடல்.
அங்கே ஒருவன் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறான். அங்கே இருக்கிற புல்வெளியில் ஏராளமான ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
அவற்றில் கருப்பு ஆடுகளும் இருந்தன.
வெள்ளை ஆடுகளும் இருந்தன.
அங்கே ஆடு மேய்க்கிறவன் எதிலும் தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான்.
குழப்பப்படுவது - குழம்புவது இரண்டுமே அவனுக்கு பிடிக்காது.
அந்த வழியாக ஒரு பெரியவர் வந்தார்.
தம்பி இங்கே ஆடு மேய்க்கிறீயா...?
ஆமாம்
உன்கிட்டே சில விவரம் கேட்டு தெரிஞ்சிக்கலாம். எதுவா இருந்தாலும் தெளிவாக கேளுங்க... பதில்ö சால்றேன்...!
இந்த மந்தையில் மொத்தம் எத்தனை ஆடுகள்....?
பார்த்தீங்களா? குழப்பமாக கேக்கறீங்க....!
வேற எப்படிக் கேட்கணும்ங்கறே?
நீங்க. கறுப்பு ஆட்டை கேக்கறீங்களா? வெள்ளை ஆட்டை கேக்கறீங்களா?
கறுப்பு ஆடு எத்தனை?
அப்படி கேளுங்க... கறுப்புஆடு ஐம்பது இருக்கு
வெள்ளை ஆடு?
அதுவும் ஐம்பது தான்!.
பெரியவர் அடுத்த கேள்வியை கேட்டார்.
இந்த ஆடெல்லாம் ஒரு நாளைக்கு எவ்வளவு புல் சாப்பிடும்?
மறுபடியும் குழப்புறீங்க!
என்ன சொல்றே?
கறுப்பு ஆடா? வெள்ளை ஆடா?
கறுப்பு ஆடு...!
10 கிலோ சாப்பிடும்.
சரி வெள்ளை ஆடு....?
அதுவும் 10 கிலோ சாப்பிடும்?
பெரியவர் லேசாக குழம்ப ஆரம்பித்தார். அடுத்த கேள்வி...
இதெல்லாம் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கறக்கும்?
மறுபடியும் தெளிவாக கேளுங்க.... கறுப்பு ஆடா? வெள்ளை ஆடா?
கறுப்பு ஆடு...!
ஐந்து லிட்டர் கறக்கும்
வெள்ளை ஆடு...?
அதுவும் ஐந்து லிட்டர் கறக்கும்.
பெரியவர் கொஞ்சம் குழப்பத்தோடு யோசிக்க ஆரம்பித்தார்.
அப்புறம் கேட்டார்
தம்பி எல்லாத்துக்கும் பதில் ஒண்ணாத்தானே இருக்கு.
ஆமாம்!
அப்படி இருக்கும்போது... எதுக்கு பிரிச்சி பிரிச்சி கேக்க சொல்றே...?
ஓ,.... அதை கேக்கறீங்களா... இதை ஆரம்பத்திலேயே கேட்டிருந்தா தெளிவாக சொல்லியிருப்பேனே.. எதுக்காக அப்படி கேக்க சொல்றேன்னா....
இங்கே இருக்கிற அந்த கறுப்பு ஆடுகள் எல்லாம் எதிர்த்த வீட்டுக்காரனுக்கு சொந்தமானவை.
வெள்ளை ஆடுகள்....?
அதுவும் எதுத்த வீட்டுக்காரனுக்குத் தான் சொந்தம்
இதற்கு மேலும் இவனிடம் பேசிக்கொண்டிருந்தால் நமக்கு பைத்தியம் பிடித்து விடும் என்பதை உணர்ந்த அந்த பெரியவர்
சரி.. நீ உன் வேலையை பாரு... நான் என் வேலையை பார்க்கிறேன். என்று சொல்லிவிட்டு மெல்ல அந்த இடத்தை விட்டு நழுவினார். 

தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி? என்பதை அந்த ஆடு மேய்க்கிறவனிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதை போலவே....
குழப்பமாய் பேசித் தெளிவு படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.
அந்த காலத்தில் சில சித்தர்கள் அப்படி இருந்திருக்கிறார்கள்.
சில புலவர்களம் அப்படி இருந்திருக்கிறார்கள்.
சித்தர்கள் பேசுவது குழப்பமாக தெரியும். அதன் உள்ளே பொருள் தெளிவாக இருக்கும்.
 =  +  = += 
அதற்கு ஒரு வேடிக்கையான உதாரணம் சொல்லலாம்.
ஓர் அரசன், அவனுக்கு ... காலில் அக்கி அது ஒரு வகை படை... தேமல் மாதிரி மன்னனுக்கே ஒ தொல்லை என்றால் மந்திரிகள் சும்மா இருப்பார்களா?
உடனே ஓடிப்போய் அரண்மனை வைத்தியரை கூப்பிட்டுகொண்டு வந்தார்கள்.
அவர் ஒரு சித்த வைத்தியர்.
சித்தர்களின் வைத்திய நூல்களையெல்லாம் கற்றவர்.
அவர் வந்தார்.
அரசனனின் காலை பார்த்தார்.
இதை குணப்படுத்துவது ரொம்ப சுலபம் என்றார். என்ன செய்ய வேண்டும் என்றார்கள்.
பொடுதலையை வச்சி கட்டினா சரியாயப்போயிடும். என்று சொன்னார். அது ஒரு வகை பச்சிலை. சொல்லிவிட்டு போய்விட்டார். அவசரமாக அடுத்த தேசத்துக்கு போக வேண்டியிருந்தது. அமைச்சர் உடனே அரண்மனை சேவகர்களை கூப்பிட்டார்.
பொடுதலை எங்கிருந்தாலும் உடனே கொண்டு வாருங்கள் என்றார்.
பொடுதலையா... அப்படின்னா... என்ன என்று தலையை சொறிய
அமைச்சருக்கு புரியவில்லை
அதனால் என்ன?
இருக்கவே இருக்கிறார்கள். அரசவை புலவர்கள். அவர்களை கூப்பிட்டு கேட்டார்.
அவரகள் உடனே அகராதியை எடுத்து புரட்டினார்கள். அதிலே அர்த்தம் போட்டிருந்தது.
அமைச்சர் யோசித்தார்.
உடனே கூப்பிட்டார் காவலாளிகளை
நம்ம தேசத்தில் முடியே இல்லாத தலை இருக்கிற ஒருத்தனைக் கண்டு பிடித்து கொண்டு வாருங்கள்.
காவலாளிகள் நாலாபக்கமும் ஓடினார்கள். ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த மண்டபம். அங்கே அப்பாவியாக ஒருத்தன் உட்கார்ந்திருந்தான்.
இவன் தான் சரி என்றான் ஒருவன்.
அவனை வெருங்கினார்கள்.
புறப்படு என்றார்கள்
எங்கே? என்றான்.
அரண்மனைக்கு த
எதுக்கு..?
ராஜா கூப்பிட்டார் உன்னை
அவனுக்கு தலைகால் புரியவில்லை. ஏதோ ராஜ உபசாரம் நடக்கப்போகிறது என்று முடிவு செய்து கொண்டான்.
உடனே புறப்பட்டான்.
அரண்மனை மேல் பகுதிக்கு போனவுடன் இவன் ஆவலை அடக்க முடியாமல் கேட்டான். எதிரே வந்த அமைச்சரிடம்
இப்பவாவது சொல்லக்கூடாதா...?
எதுக்காக என்னை இவ்வளவு தூரம்...?
அமைச்சர் சொன்னார்.
ஓ.... அதுவா வேறே ஒண்ணுமில்லே நம்ம மன்னருக்கு கால்லே அக்கி. அரண்மனை வைத்தியர் வந்து பார்த்தார். பொடுதலையை வச்சிக் கட்டச் சொன்னார். பொடுதலையின்னா முடி இல்லாத தலை அதுக்கு உன் தலை தான் பொருத்தம்....
வந்தவன் அதிர்ச்சியடைந்தான்.
இப்போ... என்ன செய்யப்போறீங்க...?
உன்னோட தலையை ராஜா கால்லே வச்சி கட்டப்போறோம்.
அவன் கண்ணை மூடி எல்லா தெய்வங்களையும் வணங்கினான். கடைசியாக கேட்டான்...
சரிங்க... இந்த யோசனையை உங்களுக்கு சொன்ன அந்த அரண்மனை வைத்தியர் இப்போ எங்கே?
அவர் இப்போ இங்கே இல்லை... வெளி தேசம் போயிருக்கார்.
சரி பரவாயில்லை. அவரோட வீடு எங்கே இருக்கு... அதையாவது சொல்ல முடியுமா?
அதோ வடக்கே பார்... அங்கே தெரிகிறதே ஒரு குடிசை.. அது தான் அவர் குடி இருக்கிற இடம்.
வந்தவன் அந்த குடிசை இருக்கிற திசையை நோக்கி இரு கைகளையும் கூப்பியவாளே நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து வணங்கினான்.
அமைச்சர் குழம்பினார்.
எதுக்காக இப்படி செய்யறே?
இப்போதைக்கு எனக்கு கண்கண்ட தெய்வம் அந்த வைத்தியர் தான்.
என்ன சொல்றே?
உண்மையை தான் சொல்றேன்.
அந்த வைத்தியர் கருணையாகலே தான் இப்போநான் உயிரோடு உங்க முன்னாடி நின்னுக்கிட்டிருக்கேன். எனக்கு உயிர் பிச்சை போதெல்லாம் தெய்வம் அவர்.
ஒண்ணும் புரியலையே...?
ஐயா... நல்லவேளையாக அந்த வைத்தியர் பொடுதலையை வச்சிக்கட்டுக்கன்னு நசுக்கி வச்சு கட்டுங்கன்னு சொல்லியிருந்தா இந்நேரம் என் கதி என்னவாயிருக்கும்?
அர்த்தம் புரியாமல் போனால் எந்த அளவுக்கு ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. பாருங்கள். சில குழப்பங்கள் தøமையை பிய்த்துக்கொள்கிற அளவுக்கு கூட கொண்டு போய் விட்டுடும்.

மார்க் ட்வைன் உங்களுக்கு தெரியும். புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர். ஒரு நாள் ஒரு பத்திரிகை நிருபர் அவரை பேட்டி காணவந்தார்.
அந்த எழுத்தாளருக்கு பேட்டி என்றால் பிடிக்காது. எதையாவது சொல்லி தப்பித்து விடுவார். ஆனால் அவரை தேடி வந்த பத்திரிகை நிருபர் அவரை விட கில்லாடி. விடாக்கண்டன். எதையாவது பேசி எப்படியாவது ஆசாமிகளை கெட்டியாக பிடித்து கொள்வார். வேறு வழியில்லாமல் மார்க் ட்வைன் இவரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். தப்பிக்க வழியில்லை. வேறு என்ன செய்யலாம்? குழப்புவ9து தான் சரியான வழி என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டார்.
சரி.. கேளுங்கள்...ö சால்கிறேன். என்று அவர் முன்னால் உட்கார்ந்தார். பத்திரிகை நிருபர் மெல்ல ஆரம்பித்தார்.
ஏன் சார்.... உங்களுக்கு சொந்தக்காரங்கன்னு யாராவது இருக்காங்களா?
என்னகேக்கறீங்க...?
உதாரணத்துக்கு ஒரு சகோதரர்...?
ஆமாம்... ஆமாம்... ஒருத்தன் இருந்தான் என்று கூறி பெருமூச்சு விட்டார் எழுத்தாளர். நிருபர் அவரை கூர்ந்து கவனித்தார்.
ஏன் சார்... ஏதாவது கெட்ட செய்தியா...?
ஆமாம் அது ஒரு துயரம்
ஏங்க.... என்ன ஆச்சு அவருக்கு?
அதை ஏன் கேக்கறீங்க... அது ஒரு சோக கதை
அப்படின்னா...?
அவன் செத்துட்டான்..!
ஐயோ பாவம்...எப்படிச் செத்தார்?
அது தானே இன்னமும் எங்களுக்கு நிச்சயமாக தெரியலே...
என்ன சொல்றீங்க... எப்படி இறந்தார்ன்னு தெரியலையா...?
அப்படி இல்லே.. எங்களுக்கு சந்தேகம் என்ன... ன்னா அவர் இறந்துட்டாரா... அப்படிங்கறது தான்.
அப்படின்னா அவர் எங்காவது மறைஞ்சுட்டாரா....அல்லது அவரை இழந்துட்டீங்களா?
அப்படியும் அதை தீர்மானமாச் சொல்ல முடியாது. ஒரு வேளை அப்படியும் இருக்கலாம். ஏன்னா மரணம்ங்களதும் ஒரு“ இழப்பு தானே... அந்த வகையிலே பார்த்தா அது மரணம் தானே நிருபர் குழம்பினார். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவு பாக்கி இருந்து அவரிடம் ஆகவே தொடர்ந்துகேட்டார்.
நீங்க öன்ன சொல்றீங்க..? அவர் இறந்து போனதே நிச்சயமில்லலேங்கறீங்களா?
சரி.. அவ்வளவு தூரத்துக்கு ஏன்... நடந்தது என்னங்கறதை விவரமாவே சொல்லிப்புடறேன் கேட்டுக்குங்களேன்.
நிருபர் நம்பிக்கை யோடு நிமிர்ந்து உட்கார்ந்தார். கையில் இருந்த குறிப்பு புத்தகமும் பென்சிலும் சுறுசுறுப்பாக இயங்க காத்திருந்தன. அவுர் சொல்ல ஆரம்பித்தார்.
நாங்க ரெண்டுபேர்... இரண்டு பேரும் இரட்டை குழந்தைகள் ஒருத்தர் பெயர் பில் இன்னொருத்தர் பெயர் ட்வைன் ஒரு நாள் குளித்து கொண்டிருக்கும்போது அந்த விபத்து நடந்தது. சின்னப்பையன் தொட்டியிலே மூழ்கி விட்டான்.
ஓ... அப்படியா? இப்பத்தான் எனக்கு புரியுது... உங்க சகோதரர் குழந்தையா இருக்கும்போதே செத்துட்டார். ங்கறீங்க
அப்படியும் சொல்ல முடியாது
என்ன சொல்றீங்க?
நாங்க இரட்டை குழந்தைங்க... எங்களில் யாரோ ஒருத்தர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். அது மார்க் ட்வைனா.... அல்லது பில்லாங்களது நிச்சயமாத் தெரியாது.
அப்படின்னா?
அதுதான் ஆரம்பத்துலேயே சொன்னேன்..
பில் இறந்து விட்டது சந்தேகம்..ன்னு
பேட்டி காண வந்த நிருபர் பேய் அறைந்தது போல் அதிர்ச்சிகுள்ளாகி.. உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிப்போனாராம். அதன்பிறகு அவர் பத்திரிகை தொழிலுக்கே முழுக்கு போட்டு விட்டதாக கேள்வி.

                                                                                                                                                  -தென்கச்சி கோ.சுவாமிநாதன்

வியாழன், 20 ஜூன், 2013

"புதிய தலைமுறை": பழமை முகம்,


18-ம் தேதி
சென்னை, திருச்சி, டெல்லி, காசியாபாத், சோனேபேட் (அரியானா), பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள எஸ்ஆர்எம் குழும அலுவலகங்கள், கல்லூரிகள், ஊடக, திரைப்பட நிறுவனங்கள் மற்றும் பச்சமுத்து குடும்பத்தினரின் வீடுகளில் 250 வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்ற சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கைகளின்போது, ரூ.6.45 கோடி ரொக்க பணமும் நன்கொடை வாங்கிய ஆவணங்கள், செலவு அதிகரித்து காட்டப்பட்ட பதிவுகள், அறக்கட்டளை பணத்தை வேறு இனங்களுக்கு திருப்பிவிடப்பட்ட ஆவணங்கள் சிக்கின.
வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் எஸ்ஆர்எம் பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து, ரூ 6.45 கோடி பணம் வேந்தர் மூவீஸ் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது. 'அந்த நிறுவனம் அவரது கட்சிக்காரர்களால் அவர் பெயரில் நடத்தப்படுவது, அவருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை 'என்று தெரிவித்திருக்கிறார்.
தன் மகளுக்கு எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்குவதற்கு ரூ 30 லட்சம் நன்கொடை கொடுத்ததாக ஒரு தந்தை கொடுத்த புகார் மீது மத்திய புலனாய்வு ஆணையம் கடந்த மார்ச் மாதம் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, ‘இப்படி கணக்கில் காட்டாமல் நன்கொடை வாங்கினால் அதற்கு வருமான வரி கட்டியிருக்க மாட்டார்களே’ என்று நான்கு மாதங்கள் கழித்து புரிந்து கொண்ட வருமான வரித் துறை இவ்வளவு ‘வேகமான’ இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
சாதாரண பள்ளி ஆசிரியராக இருந்த பச்சமுத்து தனது குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக கொண்ட அறக்கட்டளை மூலம் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமாக 5 வளாகங்களில் செயல்படும் 21 கல்லூரிகளையும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி பத்திரிகைகளையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும், வேந்தர் மூவீஸ் திரைப்பட நிறுவனத்தையும் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக இதைப் பற்றி விசாரணை நடத்தவோ, தேடுதல் நடவடிக்கை எடுக்கவோ வருமான வரித்துறையின் ஆய்வாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தோன்றவில்லை.

எஸ்ஆர்எம் வடபழனி வளாகம்
எஸ்ஆர்எம் வடபழனி வளாகம்
1969-ம் ஆண்டு சென்னை, மாம்பலத்தில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிரைமரி ஸ்கூல் மூலம் கல்விச் சேவையை ஆரம்பித்தார் பள்ளி ஆசிரியராக இருந்த பச்சமுத்து. இன்றைக்கு காட்டாங்கொளத்தூர் ஏரியை ஆக்கிரமித்து உருவாகிய 300 ஏக்கர் வளாகம், ராமாபுரம் ஏரியை ஆக்கிரமித்து உருவாக்கிய 25 ஏக்கர் வளாகம், வடபழனியின் மையப்பகுதியில் அமைந்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வளாகம், 2008-ம் ஆண்டு திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள இருங்களூரில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, டெல்லி-மீரட் நெடுஞ்சாலையில் மோதி நகர் வளாகம் ஆகியவை எஸ்ஆர்எம் கல்விக் குழுமத்துக்கு சொந்தமாக உள்ளன.
எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் 80% மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறது அதன் இணையதளம். நிகர் நிலைப் பல்கலைக் கழகமான எஸ்ஆர்எம் தனது கல்லூரிகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான நுழைவுத் தேர்வை தானே நடத்துகிறது. அதில் அவர்களே ‘உருவாக்கும்’ தர வரிசைப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
‘தர’ வரிசை எண்ணைப் பொறுத்து நன்கொடை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் போன்றவற்றுக்கு கட்டண பட்டியல் இருந்தாலும் எந்த படிப்புக்கு எவ்வளவு நன்கொடை என்று அதிகாரபூர்வ பட்டியல் இல்லை. மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக நன்கொடை வாங்குவது சட்ட விரோதமானது. இருந்தாலும் ஒரு பொறியியல் சீட்டுக்கு ரூ 20 லட்சம் வரை, மெடிக்கல் சீட்டுக்கு ரூ 80 லட்சம் வரை, எம்.பி.ஏ. சீட்டுக்கு ரூ 15 லட்சம் வரை என்று சீட்டுகள் ஏலம் விடப்படுகின்றன. யாரிடம் எவ்வளவு நன்கொடை வாங்குவது என்பதை பச்சமுத்து குடும்பத்தினர் மட்டுமே தீர்மானிக்கின்றனர். எஸ்ஆர்எம்மில் குறைந்த செலவில் இடம் வாங்கித் தருவதாக வாக்களிக்கும் ஏஜென்டுகள் பல வட இந்திய நகரங்களில் முளைத்திருக்கின்றனர்.
நாடெங்கிலும் உள்ள உயர் நடுத்தர, நடுத்தர வர்க்கத்தினர் சொத்துக்களை விற்று, நகையை அடமானம் வைத்து பணத்தை கொண்டு கொடுத்து, பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஒரு துண்டுச் சீட்டை வாங்கிக் கொண்டு தமது குழந்தைகளை படிக்க சேர்க்கிறார்கள். நன்கொடைக்கு மேல் கட்ட வேண்டிய கல்விக் கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும் நான்கு வருடத்திற்கு கல்விக் கட்டணமும் மற்ற செலவுகளும் சேர்த்து ரூ 4 முதல் ரூ 6 லட்சம் முதலீடாக போட வேண்டியிருக்கிறது. மருத்துவக் கல்லூரியிலோ இதனை விடவும் லட்சங்களின் எண்ணிக்கை கூடுகிறது.
புதிய தலைமுறை தொலைக்காட்சிஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,000 மாணவர்களை பல்வேறு படிப்புகளில் சேர்த்துக் கொள்ளும் எஸ்ஆர்எம் குழுமம் சேர்க்கை காலங்களில் மட்டும் சராசரியாக குறைந்தது ரூ 200 கோடி கருப்பு பணத்தை கையாளுகிறது என்று மதிப்பிடலாம். இந்தப் பணத்தை திரட்டிக் கொண்டு வரும் பெற்றோர்களும் சரி, அதை வாங்கி பத்திரிகை, தொலைக்காட்சி, அரசியல் கட்சி, நில ஆக்கிரமிப்பு என்று திருப்பி விடும் பச்சமுத்துவும் சரி வருமான வரிச் சட்டங்களை கழிப்பறை காகிதம் போல வேண்டுமானால் மதித்திருப்பார்கள். அதனால்தான் வருமான வரித் துறை அதிகாரிகளும், பல டஜன் அரசுத் துறை கண்காணிப்பாளர்களும் இது வரை விழித்துக் கொள்ளவில்லை.
இதைத் தவிர ஆண்டு முழுவதும் 33,000 மாணவர்களின் கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம், தங்குமிட கட்டணம் என்று ரூ 300 கோடிக்கு மேல் புழங்கும் இந்த நிறுவனத்தை தனி ஆளாக கட்டுப்படுத்துகிறார் பாரி வேந்தர் பச்சமுத்து.
கடந்த ஜனவரி மாதம் பல் மருத்துவக் கல்லூரிக்கு இந்திய பல் மருத்துவக் கழகத்திடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்காக முருகேசன் என்பவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது பிடிபட்ட மேல்மருவத்தூர் அம்மா குடும்பம் போன்ற மிடில் லெவல் கிரிமினல்களுக்கும் சரி, இப்போது ரெய்டு நடத்தப்பட்ட பச்சமுத்து குடும்பம் போன்ற பெரிய லெவல் கிரிமினல்களுக்கும் சரி சட்டங்களால் தண்டிக்கப்பட முடியாதவர்கள் என்பது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும் தெரியும், மத்திய புலனாய்வுத் துறைக்கும் தெரியும்.
அதனால்தானோ என்னவோ, உண்மைகளை உடனக்குடன் தரும், முக்கிய நிகழ்வுகளை ஹெலிகாப்டர் அனுப்பி கவர் செய்யும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தனது தொலைக்காட்சி அலுவலகம் உட்பட குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் கல்வி முறைகேடு தொடர்பாகவும், நன்கொடை என்ற பெயரில் பெற்ற கருப்பு பணம் தொடர்பாகவும், திரைப்படத் தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்ட கருப்புப் பண பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் வருமானவரித்துறையினர் நடத்திய ரெய்டு பற்றிய விபரங்களை தனது கேமராக்களில் பதிவு செய்யவில்லை.
இனி இந்தத் தொழில்முறைத் திருடர்கள் ஆளும் கட்சிக்கான மாமூல்களையும், ஜால்ரா செய்திகளையும் தவறாமல் நிறைவேற்றுவார்கள்!

நன்றி:வினவு.


------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மடிக்கணனி  :பாதுகாக்க...,
======================

 திரை மிக முக்கியம்.
 திரையை துடைக்கும் போது சரியான பொருட்களை பயன்படுத்த வேண்டும். திரை மிக அழுத்தினால் சேதமடையவும் வாய்ப்புகள் உண்டு.
 பயணம் செய்யும் போது மடிக்கணனியை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தூசி மற்றும் ஈரப்பதத்தில் இருந்து விலக்கியே வைப்பது நல்லது.
 முக்கியமாக அசல் உரிமத்துடன் கூடிய ஆண்டி-வைரஸ் மென்பொருட்களை நிறுவியிருப்பது நல்லது.
 மடிக்கணினியை தூக்கிச் செல்ல முதுகில் மாட்டும் பேக்கை பயன்படுத்துங்கள்.
 உணவு உண்ணுவதற்கு செல்லும் போதோ அல்லது தொலைபேசியில் பேசுவதற்கு செல்லும் போதோ மடிக்கணினியை ஹைபர்னேட் நிலையிலோ வைத்திருங்கள். இது மின்சார பயன்பாட்டை குறைத்து, மடிக்கணனிக்கு அதிக ஆயுளை தரும்.
 தொடர்ச்சியாக 8 மணி நேரத்திற்கு மேல் மடிக்கணனியை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
 தொடர்ச்சியாக இயக்கத்தில் இருந்தால், மடிக்கணனி அதிக சூடாகும். சில மணி நேரத்தில் அணைக்கவில்லை என்றால், அதன் செயல்பாட்டின் வேகமும் குறைந்து விடும்.
 கணனி வாங்கும் போதே ஃபயர்வால் நிறுவப்பட்டிருக்கும். அது இல்லையென்றால் உங்கள் கணனியை பாதுகாக்க ஃபயர்வலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது புதிதாக வாங்கியோ நிறுவுங்கள்.
 மடிக்கணினியை வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோதிக்க வேண்டும்.
. எப்போதும் மடிக்கணனியை ஒரு தட்டையான பரப்பில் வைத்திருந்தால் அது மடிக்கணனியை சேதப்படுத்தாமல் பாதுகாக்கும்.
 மடிக்கணனிக்கான குளிர்ச்சியை ஏற்படுத்தும் விசிறி சந்தையில் கிடைக்கிறது. அதில் ஒன்றை வாங்கி பயன்படுத்துங்கள்.
 மடிக்கணனி அதிக சூடாக்குவதை தடுக்கும்.

செவ்வாய், 18 ஜூன், 2013

ஐகோர்ட்டில் வழக்கு

"பல கோடி சொத்துக்களை வாங்கிக் குவித்த புகாரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த செல்ல பாண்டியன், நீக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் முகமது ஜான்  இரட்டை இலை சின்னத்தை முடக்க, கடிதம் கொடுத்தவர் என்ற உண்மை தெரிந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக, கூறப்படுகிறது."

"கட்சியினரை அரவணைத்து செல்வது கிடையாது. தனக்கு வேண்டிய ஒன்றிய செயலர்கள், சிலருடன் சேர்ந்து, மாவட்டத்தில் அரசியல் செய்கிறார். சமீபத்தில், கூட்டுறவு சங்க தேர்தல்களில், தி.மு.க.,வினர் பல பேர், நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கு, செல்ல பாண்டியனே காரணம். எனவே, இவர் மாவட்ட செயலராக தொடர்ந்தால், லோக்சபா தேர்தலில், தூத்துக்குடியில் அ.தி.மு.க., வெற்றி பெறுவது கடினம்' என, புகார்கள், கட்சி தலைமைக்கு பறந்தன.
suran
செல்ல பாண்டியன், 2011 ஜூலை முதல், 2013, மார்ச் 31 வரை, தூத்துக்குடியில், பலகோடி ரூபாய் மதிப்பு வீடு, கட்டடங்களை வாங்கிக் குவித்ததாக, ஆதாரங்களுடன் புகார்கள் சென்றன. சிவகாசி அம்மன்கோவில்பட்டியில், ஒரு தீப்பெட்டி ஆலையை, செல்ல பாண்டியன், விலைக்கு வாங்கியதாகவும் புகார் சென்றது. சொத்து குவிப்பு தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு தொடர, ஒரு அமைப்பினருக்கு, கவர்னர் அனுமதி அளித்து உள்ளதாக தெரிகிறது.

 லஞ்ச ஒழிப்பு போலீசார், உளவுத்துறையினர் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்தனர். அதை பார்த்த முதல்வர், அதிர்ந்து போனதாக, கட்சியினர் கூறுகின்றனர்.
தொழிலாளர் நலத்துறை மாநாட்டிற்காக, ஜூன் 4ல், ஜெனிவா சென்ற செல்ல பாண்டியன், உடனடியாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.
கட்சியினரை அரவணைத்து செல்லாத புகாருடன், சொத்துக் குவிப்பு ஆதாரங்களும் சிக்கியதால், அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலர் பதவிகள் பறிக்கப்பட்டன.


இதுகுறித்து, செல்ல பாண்டியனிடம், கேட்டபோது, ""எனக்கு, அமைச்சர் பதவியை, முதல்வர் கொடுத்தார். அவரே, பதவியை விட்டு நீக்கியுள்ளார். என்றென்றும், அம்மாவுக்கு, விசுவாசமாக இருப்பேன்,'' என்றார்.
தூத்துக்குடி, தி.மு.க.,வில், வடக்கு மாவட்ட செயலராக இருந்தவர் செல்ல பாண்டியன். அக்கட்சியின், மண்டல பொறுப்பாளராக இருந்தவரும், தற்போதைய மாவட்ட செயலருமான, பெரியசாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2001ல், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர், செயலர், மாநில இணைச் செயலர் பதவிகளை வகித்தார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஒன்றரை ஆண்டுக்கு முன், அறநிலையத் துறை அமைச்சராக இருந்த, சண்முகநாதனிடம் இருந்து, அமைச்சர், மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டு, செல்ல பாண்டியனிடம் வழங்கப்பட்டது.
 தற்போது, செல்ல பாண்டியனிடம் இருந்து இரு பதவிகளும் பறிக்கப்பட்டு, சண்முகநாதனிடம் வழங்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட, அ.தி.மு.க., செயலராகவும், சுற்றுலாத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ள, சண்முகநாதன், ஸ்ரீவைகுண்டம், எம்.எல்.ஏ., ஆக உள்ளார். கிளை, ஒன்றிய செயலர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
சட்டசபை, லோக்சபா தேர்தல் நடப்பதற்கு முன், இவரை, மாவட்ட செயலர் ஆக்கினால், அத்தேர்தல்களில், மாவட்டத்தில் கட்சி அமோக வெற்றி பெறும் என்பது, "சென்டிமென்ட்!'
இதன்படி, 2000 ம் ஆண்டிலிருந்து, இதுவரை, மூன்று முறை, மாவட்ட செயலர் பதவி வகித்த இவர், தற்போது, நான்காவது முறையாக, அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தேர்தல் முடிந்து, சில மாதங்களில், பதவி பறிக்கப்படுவது வழக்கம்.
 கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் கைத்தறித்துறை, 2011ல், அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார்.




இரட்டை இலையை முடக்க முகமது ஜான் கடிதம் கொடுத்தது அம்பலம்:

கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், சாலை விபத்தில் இறந்த அமைச்சர் மரியம்பிச்சைக்கு பதிலாக, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தொகுதி, எம்.எல்.ஏ., முகமது ஜான், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக, 2011 ஜூன், 29ம் தேதி நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டு முடிய, 12 நாள் பாக்கியுள்ள நிலையில், முகமது ஜான் நீக்கப்பட்டிருப்பது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர் மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் வந்ததன் அடிப்படையில், அமைச்சரவையில் இருந்து, நேற்று நீக்கம் செய்யப்பட்டார். அப்துல் ரகீம் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.வக்பு வாரிய தலைவர் பதவி நியமனம் நடக்க உள்ளது. அதில், இவர் தலையீடு அதிகம் இருப்பதாகவும், ஹஜ் யாத்திரைக்கு, ஏழைகளை விடுத்து, வசதி படைத்தவர்களுக்கு அனுமதி வழங்கியதாகவும் புகார் எழுந்தது.
வாணியம்பாடி தொகுதி முன்னாள், தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்தியின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கி வந்ததாகவும், தி.மு.க.,வினருக்கு சாதகமாக செயல்படுவதாகவும், ஏராளமான புகார்கள், முகமது ஜான் மீது குவிந்தது.ராணிப்பேட்டை தொகுதி, வேலூர் மாநரக மாவட்டத்தில் வருகிறது. அ.தி.மு.க., மாவட்ட செயலராக சுமைதாங்கி ஏழுமலை உள்ளார்.
இவர் தான் நிர்வாகிகள் நியமனம், கூட்டுறவு சங்க தேர்தல் பதவிகளுக்கு நியமனம் செய்ய வேண்டும்.ஆனால், அதிலும் முகமது ஜான் தலையிட்டு, நிர்வாகிகள் நியமனம் செய்வதாக கூறி, ஏராளமானவர்களுக்கு, "சாதகமாக' செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


விரைவில் வர உள்ள லோக்சபா தேர்தலில், வேலூர் தொகுதிக்கு, எம்.பி., சீட் வாங்கித் தருவதாக பலரிடம், "பேரம்' பேசியதாகவும் புகார் மேலிடம் சென்றது. இதற்கிடையே, ராணிப்பேட்டையை முன்னாள், எம்.எல்.ஏ., சந்திரசேகர் ஆதாரத்துடன் கொடுத்த புகார், மேலிடத்தின் கவனத்திற்கு சென்றது.
அதில், 1996ம் ஆண்டு, முத்துசாமி தனியாக, போட்டி அ.தி.மு.க., ஆரம்பித்த போது, இரட்டை இலை சின்னத்தை முடக்கப் பார்த்தார். அப்போது, ராணிப்பேட்டை நகர செயலராக இருந்த முகமது ஜான், முத்துசாமிக்கு ஆதரவாக, இரட்டை இலை முடக்க கடிதத்தில் கையெழுத்து போட்டுள்ளார்.
இதையறிந்த அ.தி.மு.க., மேலிடம், போட்டி அணிக்கு சாதகமாக தேர்தல் கமிஷனுக்கு, "அபிடவிட்டில்' கையொப்பமிட்ட முகமது ஜான் உள்ளிட்ட, 17 பேர் தேர்தல்களில் நிற்க தகுதி இழக்கின்றனர் என குறிப்பிட்டு, "நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழில், 1998 டிசம்பர், 12ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.


உளவுத்துறை மூலம் விசாரணை செய்ததில் இந்த தகவல் உண்மை என தெரிந்தது.
 இதனால், ஆடிப்போன மேலிடம், லோக்சபா தேர்தலில் ஏதாவது குளறுபடிகள் செய்ய வாய்ப்பிருப்பதாக கருதி, முகமது ஜானை நீக்கியதாக, அ.தி.மு.க., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 17 ஜூன், 2013

நரேந்திரமோடி[குஜராத்] உண்மை நிலை:


இந்தியாவின்  பெரு ஊடகங்களால், உச்சி முகர்ந்து கொஞ்சப்படும் நரேந்திர மோடியை, பாஜக தனது ஒரே நம்பிக்கையாக கையில் பிடித்துக் கொண்டிருக்கிறது. 
நரேந்திரமோடி பிரதமரானால் இந்தியா எங்கேயோ போய்விடும் என்று கூ று கின்றனர் .அவரின் நிர்வாகத் திறமை எப்படி உள்ளது?
குஜராத் அவரின் ஆட்சியில் என்ன நிலமையில் உள்ளது.?
கொஞ்சம் பார்ப்போம்!
அவரால் இந்தியாவுக்கு இழப்புத்தான் ஏற்படும் என்கிறார்கள் அறிவு ஜீவிகள். அவர் ஒரு மத வெறி, பாசிசவாதியாக இருப்பது தவிர வேறென்ன காரணங்கள் உள்ளன?
.
- க.ஆனந்தன்

பொதுவாக வலதுசாரி சார்புடைய இந்திய ஊடகங்கள் சமீப காலமாக தொடர்ந்து செய்து வரும் பிரச்சாரம் குஜராத் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஒளிர்கிறது என்றும் குஜராத் வளர்ச்சி மாதிரியை இந்தியாவெங்கும் நீட்டிக்கலாம் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மோடியும் அதனை செய்கிறார். இந்தியாவின் திட்டமிட்ட வளர்ச்சியை அவர் பிக்கி கூட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்கிறார். மகாத்மா காந்தி ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்து தனது வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தும் அவர் அதன் பெயரில் உள்ள மகாத்மா என்பதை நீக்க வேண்டும் என்ற கோரி தனது இந்துத்வா வெறித் தன்மையை வெளிப்படுத்துகிறார். உண்மையில் குஜராத் ஒளிர்கிறதா? புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்ப்போம்.

விவசாயிகளுக்கு எதிரானவர்:
தனது அரசின் சாதனையாக கடந்த மிகக் குறைந்த காலத்தில் விவசாயக் கால்வாய் வெட்டியதாக மாரதட்டுகிறார் மோடி. உண்மையில் ஊடகங்கள் மறைத்த மிகப் பெரிய கொடூரம் அங்கு 2003- முதல் 2007 வரை சவுராஷ்ட்ரா பகுதியில் 489 விவசாயிகள் தற்கொலை செய்த கொண்டனர் என்ற விவரத்தை மறைத்ததுதான். இந்த புள்ளி விவரங்களை அரசு மறைத்த வைத்திருந்தது. ஊடகங்களும் அமைதி காத்தன. இந்நிலையில் மிகவும் சிரமப்பட்டு தகவலறியும் சட்டத்தின் துணை கொண்டு இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அது அசாதாரண இறப்பாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. 
2007-லிருந்து இரண்டு ஆண்டுகள் மழை பொய்த்தது இந்த இறப்புகளுக்கு காரணமாகும். மிகவும் ஔ மயமான குஜராத்தில் பல விவசாயிகள் தாங்கள் வாங்கிய 50,000-70,000 கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலனவர்களுக்கு 2 ஹெக்டேர் வரை நிலம் உள்ளது. இங்கு விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அரசு அதிகாரிகளோ அல்லது ஆளும் அரசியல் பிரமுகரகளோ எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. இந்தப் போக்கை எதிரத்து பா.ஜ.க.வின் கன்னுபாய் கன்சாரியா கண்டனக் குரலெழுப்ப அவரை மோடி கட்சியை விட்டே துரத்தி அடித்தார். கிராமப்புறத்தில் மொத்தம் 10 மணி நேரம் கூட மின்சாரம் கிடையாது. அதிலும் 6 மணி நேரம் இரவு நேரத்தில்தான் வழங்கப்படும். 26.25 லட்சம் ஹெக்டேர் நிலம் பருத்தி விவசாயத்தில் உள்ளது. அரசின் கவனமின்மை காரணமாக உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்த வருகிறது.
பருத்தி உற்பத்தி
ஆண்டு
உற்பத்தி (ஹெக்டேருக்கு)
2007-08
775 கி.கி
2008-09
650 கி.கி
2009-10
635 கி.கி
2011-12
611 கி.கி
ஆதாராம்: காட்டன் அட்வைசரி போரடு
குஜராத் அரசு மோடியின் தலைமையின் கீழ் மாநிலத்தின் வருவாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அள்ளிக் கொடுப்பதன் விளைவாக விவசாயம் மிக மோசமாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ஆண்டு தோறும் 12 மில்லியன் பேல் பஞ்சு உற்பத்தி செய்யும் குஜராத் இந்த ஆண்டு வெறும் 7 மில்லியன் பேல்கள் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. விவசாய நெருக்கடி எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே அத்தாட்சி. அன்னிய மூலதனம்:
தொடர்ந்து ஊடகங்கள் ஊதிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சாரம் நமது நாட்டிலேயே அன்னிய முதலீடும் மூலதனமும் குவியும் முதல் மாநிலம் குஜராத் என்பதாகும். ஆனால் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2012 ஜூன் வரை உள்ள கிட்டதட்ட 12 வருட காலத்திற்கு ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் இது முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கிறது. குஜராத் முதல் இடத்திலும் இல்லை முதல் மூன்று இடத்திலும் இல்லை என்பதை கீழே கண்ட அட்டவணை அம்பலப்படுத்தும். மகாராஷ்ட்ராதான் இந்தியாவில்  முதல் மாநிலமாகும். தமிழ்நாடு கூட குஜராத்தை விட முன்னனியில் உள்ளது.

அன்னிய நேரடி மூலதனம் ஏப் 2000- ஜூன் 2012 வரை (ரூ கோடியில்)
மகராஷ்ட்ரா
254624
டெல்லி
155722
கர்னாடகா
45021
தமிழ்நாடு
40297
குஜராத்
36913
                       
வைப்பரண்ட் குஜராத்:
ரஜினி பாணியில் சொன்னால் குஜராத் என்றாலே சும்மா அதிருதில்ல என்ற பெயரில் ஆண்டு தோறும் மிகவும் படோடோபமாக விளம்பரப்படுத்தப்படும் விழா குஜராத்தில் அந்த விழாவின் மூலமாக அன்னிய மூலதனம் திரட்டப்படுவதாக தம்பட்டம் அடிக்கிறது. இதிலும் எவ்வுளவு பொய் புரட்டு என்பது புள்ளி விவரத்தை பார்த்தலே தெரியும். குஜராத் அரசின் சமூக பொருளாதார அறிக்கை 2011 வெளியிடும் புள்ளி விவரமே மிகவும் சுவாரசியத் தகவல்களை தருகிறது. 2011-ல் முதலீடு செய்யப்படும் தொகை என்று அறிவிக்கப்பட்டது 20 லட்சம் கோடி ருபாய். ஆனால் உண்மையில் முதலீடு செய்யப்பட்ட தொகை வெறும் ரூ.29,813 கோடி மட்டுமே. அந்த ஆண்டிலேயே கையெழுத்தான மொத்த 8,300 புரிதல் ஒப்பந்தங்களில் வெறும் 250 மட்டுமே அமலாகியது. குஜராத் வளரச்சி மாடல்  தொழிற்சாலை விரிவாக்கத்தின் மூலமாக மட்டுமே பொருளாதார வளர்ச்சி என்பதில் மட்டுமே குறியாக உள்ளது. இந்த அணுகுமுறை வெற்றிபெற வேண்டுமானால் அரசு தனியார் மூலதனத்தை பெறுவது அவசியமாகிறது. 2003 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வைப்பரண்ட் குஜராத் மாநாடுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்ட முதலீடும் உண்மையில் செய்யப்பட்ட முதலீட்டையும் பார்த்தாலே முதலீட்டாளர்கள் தங்களால் நிறைவேற்ற முடியும் முதலீடுகளை விட அதிகமாக வாக்குறுதி அளிப்பது தெரியும். முதலீடுகளை அதிகமாக சொல்ல வைத்து, அதற்காக எக்கச்சக்க சலுகைகளைக் கொடுக்கிறது அந்த அரசு. மொத்தத்தில் நமக்கும் பெப்பே, நம் பணத்துக்கும் பெப்பே காட்டுகின்றன அந்த கம்பெனிகள்.
வைப்பரண்ட் குஜராத் சம்மேளன் மூலம் திரட்டப்பட்ட நிதி (ரூ கோடியில்)
ஆண்டு
வாக்குறுதி
நிறைவேற்றப்பட்டது
2003
66068
37746
2005
106160
37939
2007
465309
107897
2009
1239562
104590
2011
2083049
29813
தனிநபர் வருமானம்:
குஜராத்தில் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் அங்கு ஜி.டி.பி. வளர்ச்சி என்பது மிகவும் அதிகம் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆகவே பொது மக்கள் அங்கு தனிநபர் வருமானம் மிகவும் என்று நினைக்கத் தூண்டப்படுகின்றனர். ஆனால் உண்மை இதற்கு மாறாக உள்ளது. தனிநபர் வருமானத்தில் குஜராத் முதல் 5 இடங்களில் கூட கிடையாது. டெல்லி தான் முதலிடத்தில் உள்ளது. இது மக்களின் உண்மையான வருமானத்தை கணக்கிட சரியான அளவில்லை என இடதுசாரிகளின் கருத்து முற்றிலும் உண்மை என்றாலும் முதலாளித்துவக் கணக்குப்படியே கூட குஜராத் கதை வேறாகத்தான் உள்ளது.  
தனிநபர் வருமானம் 2010-11   (ரூபாயில் வருடத்திற்கு)
டெல்லி
108876
மகாராஷ்ட்ரா
62729
கோவா
102844
ஹரியானா
59221
சண்டிகர்
99487
அந்தமான்
54765
பாண்டி
79333
குஜராத்
52708
ஆதாரம்: திட்ட கமிஷன்

தொழிலாளர் ஊதியத்தில் நிலைமை:
தனிநபர் வருமானம் ஒரு புறம் இருந்தாலும் உண்மையில் அங்கு தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை ஒரு அளவு கோளாக எடுத்துப் பார்த்தாலும் மிகவும் மோசமாக உள்ளது. குஜராத் முழுவதும் தொழிற்சாலைகளில் பெரும்பாலும் நிரந்தரமற்ற தினக் கூலிகளை வைத்தே தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அங்கு தொழிலாளர்கள் ஊதியம் பணி நிலைமைகள் போன்றவற்றிற்கு சங்கம் அமைத்து கோரிக்கை வைப்பது கிட்டதட்ட முடியாது என்பதே நிலைமை. அதற்கு முக்கிய காரணம் பணிகளில் பயன்படுத்தப்படும் தொழிலாளர்கள் வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் அங்கு ஆண்டுக் கணக்காக பதலிகளாக தொழிற்சாலைகளில் பணி புரிகின்றனர். இந்நிலையில் மிக அதிகமான ஜி.டி.பி. உள்ள மாநிலத்தில் தொழிலாளர்கள் கூலி மிகக் குறைவாகும். அது நகர்ப்புற தொழிலாளர்கள் கூலி நாட்டிலேயே கேரளாவில் தான் அதிகம். 
2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசீய மாதிரி சர்வேயின் புள்ளி விவரப்படி அங்கு நாளொன்றுக்கு கூலி ரூ.218/- குஜராத்திலோ நகரப்புறத்தில் ஒரு நாள் கூலி வெறும் ரூ.106/- தான். கிராமப்புறத்திலும் ஒரு நாள் கூலி இந்தியாவிலேயே அதிகம் பஞ்சாப்பில் தான். இங்கு ஒரு நாள் கூலி ரூ.152/- குஜராத் நாட்டில் 12 வது இடத்தில் உள்ளது அங்கு ஒரு நாள் கூலி (கிராமப்புறத்தில்) வெறும் ரூ.83/- ஆகும். மிக அதிக ஜி.டி.பி. மிகக் குறைந்த ஒரு நாள் ஊதியம் என்பது சுரண்டலின் அளவைக் காட்டுகிறது.
வேலைவாய்ப்பு விகிதம்
தொழில்துறையில் மிகவும் அதிகமான வளர்ச்சி அடைந்தால் அதற்கேற்ப வேலை வாய்ப்புகள் பெருக வேண்டுமே. ஆனால் வேலை வாய்ப்பு விகிதம் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எந்த வளர்ச்சியும் இன்றி குஜராத் இருந்து வருகிறது. கிராமப்புறத்தில் உள்ள வளர்ச்சி நிலங்களை விவசாயம் செய்யாமல் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று விடுவதால் தற்போது நிதி இருந்தாலும் மேலும் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு இது இட்டு செல்கிறது. வாங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடங்களை தங்கள் வீட்டுப் பெண்களின் பெயரில் பதிவு செய்தால் பத்திரப் பதிவு கட்டணமும் கிடையாது. மோடியின் வர்க்க அரசியல் செயல்படும் விதம் இதுதான். 

குழந்தைகள் ஊட்டச்சத்து  மிக மோசமான மாநிலங்களில் ஒன்று
தொழிலாளர்களின் குறைவான ஊதியம் மற்றும் மிக மோசமான வாங்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக மால்நியுட்ரிஷன் என அழைக்கப்படும் ஊட்டச்சத்து குறைபாடு தொழிலாளர்களிடமும் அவர்தம் குழந்தைகளிடமும் ஏற்பட்டுள்ளது. புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் குழந்தைகள் 2012 புள்ளவிவர மதிப்பீடு என்ற தலைப்பில் ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது.  
  1.            இந்த அறிக்கையின் படி குஜராத்தில் 40 முதல் 50 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளது என்று தெரிவிக்கிறது. இது ஒன்றே குஜராத் வளரச்சி என்ற மாயையை வெடித்து சிதற வைக்க போதுமானது. இவ்வாறான மிகக் குறைவான எடையுள்ள குழந்தைகள் மிக அதிகமாக உள்ள இதர மாநிலங்கள் மேகாலாயா, சட்டீஸ்கர், உ.பி. மற்றும் ஒடிசா. ஐ.நா.வின் மனித வளர்ச்சி அறிக்கை 2011 குஜராத்தில் கிட்டதட்ட பாதி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பீடிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கிறது. எடை குறைவான குழந்தைகள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைவான குழந்தைகள் மிகமிகக் குறைவாக உள்ள மாநிலம் மேகாலயா.

2.            இங்கு 19.9 சதவீதம் குழந்தைகள் எடைகுறைவாக உள்ளது. 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் எடைகுறைவாக உள்ள மாநிலங்கள்: ம.பி.(60), ஜார்க்கண்ட்(56) மற்றும் பீகார் (55.9)

3.            40 சதவீதத்திற்கு மேல் 50 சதவீதத்திற்குள் உள்ள மாநிலங்கள்: குஜராத் மேகாலயா சட்டீஸ்கர உத்திர பிரதேசம் மற்றும் ஒடிசா. (இந்தியாவில் குழந்தைகள் 2012- ஒரு புள்ளிவிவர அளசல் -மத்திய புள்ளிவிவர மற்றும் திட்டமிடல் அமலாக்க அமைச்சகம்)

குழந்தை இறப்பு விகிதம்:
குழந்தை இறப்பு விகிதம் குஜராத்தில் மிகவும் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் விகிதத்தின் அடிப்படையிலான பட்டியலில் குஜராத் 11-வது இடத்தில் தான் உள்ளது. அதாவது 1,000 குழந்தைகள் பிறப்பிற்கு 44 குழந்தைகள் இறக்கின்றன. கிராமப்புறத்தில் மிகக் குறைவான மருத்துவ வசதிகள் உள்ள நிலையில் பட்டியல் இன மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் அடித்தட்டில் வைக்கப்பட்டிருப்பதனால் இவர்களின் குழந்தை இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. 2012 ஆம் ஆண்டு யுனிசெஃப் நிறுவனம் மாநில வாரியாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதல் குஜராத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இரண்டில் ஒன்று (ஐம்பது சதவீதம்) ஊட்ட சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. நான்கில் மூன்று குழந்தைகள் இரத்த சோகையால் பீடிக்கப்பட்டள்ளன.  குழந்தை மற்றும் தாய் இறப்பு விகிதம் கடந்த பத்தாண்டில் மிகவும் குறைவாகவே குறைந்துள்ளது... குஜராத்தில் மூன்றிலொரு தாய்மார்கள் மிக மிக குறைவான ஊட்டசத்துடன் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்கிறது.    
குழந்தை இறப்பு விகிதம் (ஆயிரம் குழந்தைப் பிறப்பிற்கு) 2010
மத்திய பிரதேசம்
62
மேகலயா
55
உத்திரபிரதேசம்
61
சட்டீஸ்கர்
51
அஸ்ஸாம்
58
பீகார்
48
ராஜஸ்தான்
55
ஆந்திரா
46
மகராஷ்ட்ரா
55
ஹரியானா
48
குஜராத்
44
ஆதாரம்: (இந்தியாவில் குழந்தைகள் 2012- ஒரு புள்ளிவிவர அளசல் - மத்திய புள்ளிவிவர மற்றும் திட்டமிடல் அமலாக்க அமைச்சகம்)
 
குழந்தைகள் கல்வி:
ஆர்.எஸ்.எஸ். தனது நாசகார மதவெறிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தும் கேந்திரமான துறை கல்வித் துறையாகும். இருப்பினும் இங்கும் பாசிச மோடியின் கார்ப்பரேட் கலாச்சாரமே மேலோங்கி உள்ளது. உயர் கல்வியில் அன்னியப் பல்கலைக் கழகங்களோடு பங்குதாரர்களாக செயல்பட வேண்டும் என்று மோடி தனது அரசின் கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளார். பள்ளியில் சேறும் குழந்தைகளை தொடர்ந்து தக்க வைக்கும்  நாடு தழுவிய பட்டியலில் குஜராத் 18 வது இடத்தில் உள்ளது. ஒரு குழந்தை சாராசரியாக பள்ளியில் செலவிடும் ஆண்டு குஜராத்தில் 8.79 (8-வது இடம்) கேரளா முதலிடம் 11.33 ஆண்டுகள். நமது நாட்டில் மிக அதிக கல்வி பெற்ற மாநிலங்களின் வரிசையில் குஜராத் 7 வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதா யுனிசெப் நிறுவனம் தெரிவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மோடி அரசு தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் செயல்திட்டத்தில் பயணிப்பதுதான்.
பள்ளிக் கல்வியில் தொடரும் ஆண்டுகள்
1
கேரளா
11.33
10
ஆந்திரா
9.66
2
ஹிமாச்சல் பிரதேசம்
11.05
11
பீகார்
9.58
3
தமிழ்நாடு
10.57
12
அஸ்ஸாம்
9.54
4
உத்தரகாண்ட்
10.23
13
சட்டீஸ்கர்
9.31
5
மகராஷ்ட்ரா
9.86
14
ராஜஸ்தான்
9.19
6
பஞ்சாப்
9.80
15
உத்திரபிரதேசம்
9.19
7
ஜார்கண்ட்
9.68
16
மத்திய பிரதேசம்
8.95
8
ஹரியானா
9.68
17
மே.வங்கம்
8.87
9
கர்னாடகா
9.75
18
குஜராத்
8.79
ஆதாரம் : யு.என்.டி.பி.

வறுமை ஒழிப்பில் ஒடிசாவைவிட பின்தங்கிய மாநிலம்
தேசீய மாதிரி கணக்கெடுப்பு 2004 முதல் 2010 ஆண்டு வரைக்கான காலக் கட்டத்தில் ஒடிசா மாநிலமே 20.2 சதவீதத்துடன் வறுமைக் குறைப்பு திட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தோ 8.6 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. ஒடிசா மாநிலம் குஜராத் மாநிலத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான ஜி.டி.பி வளரச்சியைக் கொண்டுள்ள மாநிலமாகும். கரிப் கல்யாண் மேளா என்பன போன்று மோடியின் கடந்த ஆட்சிக் காலத்தின் இறுதியில்தான் மிகவும் அதிகமாக நடைபெற்றன என்றாலும் உண்மையில் வறுமை ஒழிப்பிற்கான கறாரான திட்டமிடல் ஏதுமில்லை. 
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கையில் 2004-க்கும் 2010-க்கும் இடையே வீழ்ச்சி (சதவீதத்தில்)
மாநிலம்
சதவீதம்
மாகாராஷ்ட்ரா
13.7
தமிழ்நாடு
12.3
கர்னாடகா
9.7
ராஜஸ்தான்  
9.6
குஜராத்         
8.6
ஆந்திரா
8.5
ஆதாரம்: தேசீய மாதிரி கணக்கெடுப்பு இருப்பிடம்

குடிநீர் மற்றும் சுகாதாரம்:
குஜராத்தில் இருப்பிடம் உணவு துணி ஆகியவற்றின் விலை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மிகவும் அதிகமாக உள்ளது. அத்தியாவசியப் தேவைகளுக்காக செலவுகள் நாட்டிலேயே குஜராத் 8 வது இடத்தில் உள்ளது. குஜராத்தின் கிராமப்புறத்தில் 16.7 வீடுகள் பொது குழாய்களையே பயன்படுத்துகின்றனர். தண்ணீர் வசதி இல்லாத கிராமம் மிக அதிகமாக உள்ளது. அதே போன்று கிராமப்புறத்தில் 67 சதவீதம் பேர்களும் நகர்ப்புறத்தில் 69 சதவீதம் பேர்களும் பொது இடங்களையே கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நீர் ஆதாரங்கள் மிகவும் மோசமான பாதிப்பிற்குள்ளாகின்றன. 
மாசுக்கட்டுப்பாடு:
குஜராத்தில் ஒரு தொழில் செய்பவருக்கு அளிக்கப்படும் முழு சுதந்திரமே அவர் நிலம் நீர் காற்று என எதை வேண்டுமானாலும் தான் விரும்புகிறவரை மாசுபடுத்தலாம். எந்த கட்டுப்பாடும் கிடையாது (புத்தகத்தில் இருந்தாலும் மோடியின் மாநிலத்தில் அவை எள்ளவும் பயன்படுத்தப்பட மாட்டாது). சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் ஆலங் துறைமுகத்தில் பிரான்சு தேசத்தின் விமானந்தாங்கி கப்பல் கிளமன்சு உடைப்பதற்காக வந்ததே ஞாபகம் உள்ளதா? அதனை தடுத்த நிறுத்த சமூக ஆர்வலர்கள்தான் முயன்றார்களே தவிர, கடைசி வரை குஜராத் அரசு அந்தக் கப்பலை உடைப்பதற்கு அனுமதி அளித்திருந்தது. இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. பொதுவாக நிலம், நீர், காற்று ஆகியவை எந்தளவுக்கு மாசுபட்டுள்ளது என்பதை அளக்க சி.இ.பி.ஐ (Comprehensive Environmental Pollution Index) பயன்படுத்தப்படுகிறது. இதில் 70 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் அந்தப் பகுதி மனிதர்கள் வாழ்வதற்கு லாயக்கற்ற பகுதியாகும். இதன் அர்த்தம் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மாசுவை அந்த நிலம் தானாக சரிசெய்யும் அளவைத் தாண்டிவிட்டது என்பதாகும். மத்திய மாசு கட்டுபாட்டு வாரியத்தின் புள்ளி விவரத்தின் படி குஜராத்தின் அங்கிலேஷ்வர் மற்றும் வேப்பி பகுதிகள் நாட்டின் மிக அதிகமான மாசுபட்ட 88 நகரங்களில் முதலிடங்களில் உள்ளன. அங்கிலேஷ்வர் பெற்றுள்ள குறியீட்டெண் 88.50. வெப்பி 88.09 புள்ளிகள் பெற்றுள்ளன. முதல் 88 நகரங்களில் 8 நகரங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதி நீண்ட காலமாக நிலக்கரி சுரங்கங்களால் மிகவும் மாசுபட்ட பகுதியாக அறியப்படும் பகுதியாகும். அந்தப் பகுதி 13 வது இடத்தில்தான் உள்ளது.
 
suran
முடிவுரை:
மோடி முதல்வாரன பிறகு குஜராத்தில் நடைபெறும் சமூக அரசியல் மற்றும் பொருளாதார பரிசோதனைகள் இந்தியாவை ஒரு மதவாத பாசிச அரசிற்கான முன்னோட்டமாகும். இங்கு ஜெர்மனியின் ஹிட்லரைப் போன்று தொழில் வளர்ச்சி இருக்கும். ஜி.டி.பி. வளர்ச்சி இருக்கும் ஆனால் மனித வளர்ச்சி குறியீடு மிக மோசமாக இருக்கும். குஜராத்தின் மோசமான மனித வளர்ச்சிக் குறியீடுகளுக்கு அதன் சமூகப் பார்வையான மிக ஏழ்மையில் உள்ள தலித் பழங்குடியினர் மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினர் ஆகியோர்களை உதாசீனப்படுத்தும் போக்கின் நேரடி விளைவாகும். அவர்கள் பயன்படுத்தும் பொது கல்வி, சுகாதாரம் மருத்துவம், வேலைவாய்ப்பு உரிமை, குறைந்தபட்ச ஊதியம் போன்றவற்றில் அரசு விலகிவருவதனால் ஏற்படும் ஏற்ற தாழ்வு நிலையே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

எனவே நாம் எந்தக் கட்சியை ஆதரித்தாலும், அவர்கள் கொள்கைகளை கவனமுடன் பார்ப்போம். ஏனென்றால், இது நாம் தேர்ந்தெடுக்கும் அரசியல் நமது எதிர்காலத்திற்கான முதலீடு.
suran

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...